ETV Bharat / state

திருமணம் செய்வதாகக்கூறி ரூ.30 லட்சம் மோசடி; துணை நடிகை மீது புகார்

திண்டுக்கல்லில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி ரூ.30 லட்சம், 10 சவரன் நகைகள் மோசடி செய்த துணை நடிகை மீது அளிக்கப்பட்ட புகாரைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

author img

By

Published : Aug 2, 2022, 11:05 PM IST

திருமணம் செய்வதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி; துணை நடிகை மீது புகார்
திருமணம் செய்வதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி; துணை நடிகை மீது புகார்

திண்டுக்கல்: கொடைக்கானலைச் சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் சொந்தமாக யூ-ட்யூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ, வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில் நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் கணேஷ் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்புவைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதைத்தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன்ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்குச்சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாகப் பழகியுள்ளனர்.

திவ்யபாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துச்சென்றுள்ளார். தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவே திவ்யபாரதிக்கும் பகலவன் ராஜாவிற்கும் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதமாதம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொடுத்து வந்துள்ளார், பகலவன் ராஜா. மேலும் அவரிடம் திவ்யபாரதி உடல்நிலை சரியில்லை மருத்துவச்செலவிற்காக பணம் வேண்டும் என ஒன்பது லட்சம் ரூபாய் கேட்டு வாங்கியுள்ளார். பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தைக்கூறி 10 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதியைப் பற்றி விசாரித்துள்ளார். அப்பொழுது தான் திவ்யபாரதிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி இருப்பதும், அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் எனவும் தெரிய வந்தது.

தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா, தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் பகலவன் ராஜா புகார் அளித்தார்.

திவ்யபாரதி தற்போது வேறு மூன்று ஆண்களுடன் சேர்ந்து உல்லாசமாக சுற்றித் திரிவதாகவும், பணமுள்ள ஆண்களைக் குறி வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார், பகலவன் ராஜா. தற்பொழுது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்வதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி; துணை நடிகை மீது புகார்

இதையும் படிங்க: கம்பம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

திண்டுக்கல்: கொடைக்கானலைச் சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் சொந்தமாக யூ-ட்யூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ, வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில் நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் கணேஷ் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்புவைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதைத்தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன்ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்குச்சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாகப் பழகியுள்ளனர்.

திவ்யபாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துச்சென்றுள்ளார். தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவே திவ்யபாரதிக்கும் பகலவன் ராஜாவிற்கும் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதமாதம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொடுத்து வந்துள்ளார், பகலவன் ராஜா. மேலும் அவரிடம் திவ்யபாரதி உடல்நிலை சரியில்லை மருத்துவச்செலவிற்காக பணம் வேண்டும் என ஒன்பது லட்சம் ரூபாய் கேட்டு வாங்கியுள்ளார். பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தைக்கூறி 10 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதியைப் பற்றி விசாரித்துள்ளார். அப்பொழுது தான் திவ்யபாரதிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி இருப்பதும், அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் எனவும் தெரிய வந்தது.

தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா, தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் பகலவன் ராஜா புகார் அளித்தார்.

திவ்யபாரதி தற்போது வேறு மூன்று ஆண்களுடன் சேர்ந்து உல்லாசமாக சுற்றித் திரிவதாகவும், பணமுள்ள ஆண்களைக் குறி வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார், பகலவன் ராஜா. தற்பொழுது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்வதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி; துணை நடிகை மீது புகார்

இதையும் படிங்க: கம்பம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.