ETV Bharat / state

உதவி கேட்பது போல் ஓட்டுநரைத் தாக்கி கொள்ளை: 4 பேர் கைது - நான்கு பேர் கைது

திண்டுக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் உதவி கேட்பது போல் லாரியை வழி மறித்து கத்திமுனையில் ஓட்டுநரைத் தாக்கி கொள்ளையடித்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest
arrest
author img

By

Published : Jul 19, 2021, 12:56 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ராஜசேகர் (46). இவர் சரக்கு வாகனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மீன்களை ஏற்றிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு மீன்களை ஏற்றிச்சென்று கேரளாவில் மீன்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் நாகப்பட்டினத்திற்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து, ஜூலை 14ஆம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராஜசேகர் வந்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது உதவி கேட்பதுபோல் நான்கு பேர் அவரை வழிமறித்துள்ளனர். ராஜசேகர் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு உதவுவதற்காக இறங்கினார். இதனையடுத்து அந்த நபர்கள் ராஜசேகரை அருகில் இருந்த காட்டிற்கு இழுத்துச் சென்று தாக்கினர். அங்கிருந்து தப்பிக்க ராஜசேகர் முயற்சித்தபோது கொள்ளைக் கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 35 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

g
கைது செய்யப்பட்டவர்கள்

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜசேகர் காப்பாற்றுமாறு கூக்குரலிடவே, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினருக்கு தகவலும் கொடுத்தனர்.

இத்தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் ராஜசேகரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், ராஜசேகரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றது மோர்பட்டியை சேர்ந்த தினேஷ் கண்ணன் (24), ராஜேஷ் கண்ணன் (27), செங்குளத்து பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்ற சூசை (33), கொல்ல பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (35) என்பது தெரியவந்தது.

அதனையடுத்து நான்கு பேர் மீதும் வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வேடச்சந்தூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண் மீது தாக்குதல்: உதவி ஆய்வாளர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ராஜசேகர் (46). இவர் சரக்கு வாகனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மீன்களை ஏற்றிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு மீன்களை ஏற்றிச்சென்று கேரளாவில் மீன்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் நாகப்பட்டினத்திற்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து, ஜூலை 14ஆம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராஜசேகர் வந்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது உதவி கேட்பதுபோல் நான்கு பேர் அவரை வழிமறித்துள்ளனர். ராஜசேகர் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு உதவுவதற்காக இறங்கினார். இதனையடுத்து அந்த நபர்கள் ராஜசேகரை அருகில் இருந்த காட்டிற்கு இழுத்துச் சென்று தாக்கினர். அங்கிருந்து தப்பிக்க ராஜசேகர் முயற்சித்தபோது கொள்ளைக் கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 35 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

g
கைது செய்யப்பட்டவர்கள்

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜசேகர் காப்பாற்றுமாறு கூக்குரலிடவே, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினருக்கு தகவலும் கொடுத்தனர்.

இத்தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் ராஜசேகரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், ராஜசேகரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றது மோர்பட்டியை சேர்ந்த தினேஷ் கண்ணன் (24), ராஜேஷ் கண்ணன் (27), செங்குளத்து பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்ற சூசை (33), கொல்ல பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (35) என்பது தெரியவந்தது.

அதனையடுத்து நான்கு பேர் மீதும் வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வேடச்சந்தூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண் மீது தாக்குதல்: உதவி ஆய்வாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.