ETV Bharat / state

கோம்பையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வனத் துறையினர் திணறல் - Wild elephants are unable to chase wild elephants

திண்டுக்கல்: கன்னிவாடி, கோம்பைப் பகுதியில் மூன்று ஏக்கர் தென்னை, வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

dindigul
dindigul
author img

By

Published : Jan 17, 2020, 4:13 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பகுதியின் மேற்குத்தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கோம்பை. இந்தக் கோம்பைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து விவசாயிகளை பயமுறுத்திவருகிறது. அதே சமயத்தில் வனத் துறைக்கும் சவால்விட்டுவருகிறது. மேற்குத் தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளில் நீலமலைக்கோட்டை முதல் தருமத்துப்பட்டி அணைவரை இந்த யானைக் கூட்டம் உலாவருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோம்பைப் பகுதியில் விவசாயி முருகன் என்பவரை இரவு நேரத்தில் யானை ஒன்று மிதித்துக் கொன்றது. இதனையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் மதுரை- ஒட்டன்சத்திரம் சாலையில் முருகனின் உடலை வைத்து யானைகளை உடனடியாக விரட்டியடிக்க வனத் துறையிடம் கோரிக்கைவைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, வனத் துறையினர் யானைகளை விரட்டியடிப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது இந்தச் சம்பவத்திற்கு பிறகும் கடந்த ஒருவாரத்தில் 300 தென்னை, 200-க்கும் மேற்பட்ட வாழை, சோளப் பயிர்கள் என அனைத்தையும் யானைகள் நாசம் செய்துள்ளன. அதோடு மட்டுமில்லாமல் மூன்று ஏக்கர் பரப்பளவிலான தென்னை மரங்கள், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் தொடர்ந்து அச்சமடைந்துள்ளனர்.

நிலங்களை இழந்துவாடும் விவசாயிகள் வனத் துறை போதிய நடவடிக்கை மேற்கொள்வதில் மெத்தனப்போக்கு காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காட்டு யானையால் சீரழிந்த தென்னைமரம்

பூண்டி, பழவேற்காடு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

வனத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படியொரு நிகழ்வு வேதனையளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குற்றச்சாட்டு ஒருபக்கம் இருந்தாலும் யானைகளை விரட்டுவதில் வனத் துறையினர் திணறிவருவதாகவும் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பகுதியின் மேற்குத்தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கோம்பை. இந்தக் கோம்பைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து விவசாயிகளை பயமுறுத்திவருகிறது. அதே சமயத்தில் வனத் துறைக்கும் சவால்விட்டுவருகிறது. மேற்குத் தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளில் நீலமலைக்கோட்டை முதல் தருமத்துப்பட்டி அணைவரை இந்த யானைக் கூட்டம் உலாவருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோம்பைப் பகுதியில் விவசாயி முருகன் என்பவரை இரவு நேரத்தில் யானை ஒன்று மிதித்துக் கொன்றது. இதனையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் மதுரை- ஒட்டன்சத்திரம் சாலையில் முருகனின் உடலை வைத்து யானைகளை உடனடியாக விரட்டியடிக்க வனத் துறையிடம் கோரிக்கைவைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, வனத் துறையினர் யானைகளை விரட்டியடிப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது இந்தச் சம்பவத்திற்கு பிறகும் கடந்த ஒருவாரத்தில் 300 தென்னை, 200-க்கும் மேற்பட்ட வாழை, சோளப் பயிர்கள் என அனைத்தையும் யானைகள் நாசம் செய்துள்ளன. அதோடு மட்டுமில்லாமல் மூன்று ஏக்கர் பரப்பளவிலான தென்னை மரங்கள், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் தொடர்ந்து அச்சமடைந்துள்ளனர்.

நிலங்களை இழந்துவாடும் விவசாயிகள் வனத் துறை போதிய நடவடிக்கை மேற்கொள்வதில் மெத்தனப்போக்கு காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காட்டு யானையால் சீரழிந்த தென்னைமரம்

பூண்டி, பழவேற்காடு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

வனத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படியொரு நிகழ்வு வேதனையளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குற்றச்சாட்டு ஒருபக்கம் இருந்தாலும் யானைகளை விரட்டுவதில் வனத் துறையினர் திணறிவருவதாகவும் கூறப்படுகிறது.

Intro:திண்டுக்கல் 17.01.2020
கன்னிவாடி கோம்பைப் பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் , 3 - ஏக்கர் தென்னை மரங்கள் சேதப்படுத்தியது. மோதும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளையும் சேதப்படுத்தியது. சில மாதங்களாக 10 -ற்கும் மேற்பட்ட யானைகள் இப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம். யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறை திணரல்.
Body:திண்டுக்கல் 17.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

கன்னிவாடி கோம்பைப் பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் , 3 - ஏக்கர் தென்னை மரங்கள் சேதப்படுத்தியது. மோதும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளையும் சேதப்படுத்தியது. சில மாதங்களாக 10 -ற்கும் மேற்பட்ட யானைகள் இப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம். யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறை திணரல்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கோம்பை. இந்த கோம்பைப் பகுதியில்தான் 10-ற்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட ஒரு கூட்டம் உலாவந்து விவாயிகளுக்கு பீதியை கிளப்பி வருகிறது. அதே சமயத்தில் வனத்துறைக்கும் சவால் விட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளில் நீலமலைக்கோட்டை முதல் தருமத்துப்பட்டி அணை வரை இந்த யானைக்கூட்டம் உலா வருகிறது. ஆனால் விவசாயிகள் இதனை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் , கடந்த 10- தினங்களுக்கு முன்பு கோம்பைப் பகுதியில் உள்ள விவசாயியான முருகன் என்பவரை இரவு நேரத்தில் மிதித்துக் கொன்றது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மதுரை- ஒட்டன்சத்திரம் சாலையில் முருகனின் உடலை வைத்து 4 - மணி நேரம் யானைகளை விரட்ட நடவடிக்கை உடனடியாக போரட்டம் நடத்தினர். காவல்துறை மற்றும் வனத்துறையினர் உதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது . ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 தென்னை, 200க்கும் மேற்பட்ட வாழை சோளப் பயிர்கள் என அனைத்தையும் நாசம் செய்துள்ளது. தற்போது 3 - ஏக்கர் பரப்பளவிலான தென்னை மரங்கள் சேதப்படுத்தியதோடு மேலும் இரண்டு ஆழ்துளைக்கிணறுகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து அச்சமடைந்துள்ளனர்.ஆனால் வனத்துறை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மெத்தனப்போக்காக செயல்படுவதாகவும் விவசாயின் வேதனையடைகின்றனர். வனத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படியொரு நிகழ்வு வேதனையளிப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

Conclusion:திண்டுக்கல் 17.01.2020
கன்னிவாடி கோம்பைப் பகுதியில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் , 3 - ஏக்கர் தென்னை மரங்கள் சேதப்படுத்தியது. மோதும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளையும் சேதப்படுத்தியது. சில மாதங்களாக 10 -ற்கும் மேற்பட்ட யானைகள் இப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம். யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறை திணரல்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.