ETV Bharat / state

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாலை மறியல்: மின்வாரிய தொழிலாளர்கள் கைது!

author img

By

Published : Nov 6, 2019, 9:59 AM IST

திண்டுக்கல்: மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

electricity workers Road pickup in dindigul


திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ள தலைமை மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

மின்வாரியத்தில் தினக்கூலியாக 380 ருபாய் வழங்க வேண்டும் என்றும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் மின்வாரிய தொழிலாளர்கள் சாலை மறியல்

மேலும் தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பணிபுரிந்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, மின்வாரியத்தில் பணிநிரந்தரம் செய்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து தங்களிடம் பணியை மட்டும் வாங்கிக் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய தொழிலாளர்களைத் தடுத்துநிறுத்தி கைது செய்தனர்.

இதையும் படிங்க:

பிளாஸ்டிக்கை உண்டதால் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு!


திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ள தலைமை மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

மின்வாரியத்தில் தினக்கூலியாக 380 ருபாய் வழங்க வேண்டும் என்றும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் மின்வாரிய தொழிலாளர்கள் சாலை மறியல்

மேலும் தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பணிபுரிந்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, மின்வாரியத்தில் பணிநிரந்தரம் செய்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து தங்களிடம் பணியை மட்டும் வாங்கிக் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய தொழிலாளர்களைத் தடுத்துநிறுத்தி கைது செய்தனர்.

இதையும் படிங்க:

பிளாஸ்டிக்கை உண்டதால் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு!

Intro:திண்டுக்கல் 05.11.19

மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசாரால் கைது.


         Body:மின்வாரியத்தில் தினக்கூலியாக 380 ருபாய் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பேரிடர் காலங்களில் ஓக்கி, வர்தா, தானே, கஜா மற்றும் மழை வெள்ளம் போன்ற காலங்களில் பணிபுரிந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை தமிழக அரசு மின்வாரியத்தில் பணிநிரந்தரம் செய்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து தங்களிடம் பணியை மட்டும் வாங்கி கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதே போல் தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலை மீனாட்சி நாயக்கர் போட்டியில் உள்ள தலைமை மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கரூர் புறவழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் மின்சார வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.