ETV Bharat / state

மீண்டும் உளறி சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் - அதிமுகவினர் அதிருப்தி

author img

By

Published : Aug 24, 2019, 12:03 AM IST

Updated : Aug 24, 2019, 12:30 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு தேர்வாணையம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு சிவில் சர்வீஸ் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக்கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

dindigul srinivasan

திண்டுக்கல் மாவட்டம் நந்தனார்புரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அமைச்சர் உளறல் வீடியோ

அப்போது பேசிய அமைச்சர் சீனிவாசன், இளைஞர்கள் நிறைய பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள், அமைச்சரிடம் சொன்னால் வேலை கிடைக்கும் என்று கூறுகின்றனர். நான் சொல்வது என்னவென்றால் உடனே படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வு இருக்கிறது. இதன் மூலம் படித்த மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் யார் தயவும் தேவையில்லை. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் எழுதிய எழுத்தின் மூலமாக கற்ற கல்வியின் மூலமாக உங்கள் வீடு தேடி அந்த வேலை வரும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சர் சீனிவாசன், தமிழ்நாடு தேர்வாணையம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு சிவில் சர்வீஸ் என உளறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வாஜ்பாய் நல்ல பட்ஜெட்டை அறிவித்துள்ளார் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேபோன்று தற்போது சிவில் சர்வீஸ் என்று கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மேடை பேச்சுக்கள் சர்ச்சைகளாக தொடர்ந்து கொண்டே இருப்பது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நந்தனார்புரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அமைச்சர் உளறல் வீடியோ

அப்போது பேசிய அமைச்சர் சீனிவாசன், இளைஞர்கள் நிறைய பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள், அமைச்சரிடம் சொன்னால் வேலை கிடைக்கும் என்று கூறுகின்றனர். நான் சொல்வது என்னவென்றால் உடனே படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வு இருக்கிறது. இதன் மூலம் படித்த மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் யார் தயவும் தேவையில்லை. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் எழுதிய எழுத்தின் மூலமாக கற்ற கல்வியின் மூலமாக உங்கள் வீடு தேடி அந்த வேலை வரும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சர் சீனிவாசன், தமிழ்நாடு தேர்வாணையம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு சிவில் சர்வீஸ் என உளறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வாஜ்பாய் நல்ல பட்ஜெட்டை அறிவித்துள்ளார் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேபோன்று தற்போது சிவில் சர்வீஸ் என்று கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மேடை பேச்சுக்கள் சர்ச்சைகளாக தொடர்ந்து கொண்டே இருப்பது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Intro:திண்டுக்கல் 23.08.19

தமிழ்நாடு தேர்வாணையம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு சிவில் சர்வீஸ் என உளறிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Body:
திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் முதல் கூட்டம் இன்று 23.08.19 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசுகையில்

இளைஞர்கள் நிறைய பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள் மந்திரியிடம் சொன்னால் வேலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அமைச்சர் ஆகிய நான் சொல்வது என்னவென்றால் உடனே படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டுமென்றால் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வு இருக்கு படித்த குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும். அதில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டால் யார் தயவும் தேவையில்லை. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் எழுதிய எழுத்தின் மூலமாக கற்ற கல்வியின் மூலமாக உங்கள் வீடு தேடி அந்த வேலை வரும். வேற யாரையும் நம்ப வேண்டாம். சமீபத்தில் வனத்துறை மூலமாக காவலர்கள் மற்ற பள்ளிகளுக்கு வேலை வந்து ஆன்லைன் மூலமாக அப்ளை பண்ணி இருப்பார்கள் பலர். வனத்துறை யை பொருத்தவரை போலீஸ் போலவே தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் உடல்தகுதி அவசியம் இப்படி தகுதி உள்ளவர்கள் தான் அதில் போக முடியும். நம்ம வனத்துறை தானே உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம் வனத் துறையில் வேலை வாங்கி கொடுங்கள் 100 பேர் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். எது நடக்காதோ அதை கோரிக்கையாக கொடுப்பார்கள். அந்த மாதிரி கோரிக்கைகள் இங்கு வேண்டாம். பரீட்சை எழுதினால் வேலை கிடைக்கும்.

தவறாக போன காலங்களில் 30 வயது 40 வயதிற்க்கு எல்லாம் முதியோர் உதவித் தொகை கொடுத்துவிட்டார்கள். ஆதரவற்றவர்கள் ஓய்வு ஊதியம் கொடுக்க தகுதியானவர்கள் என்றால் முதியோர் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு பொறுத்தவரை நேர்முகத் தேர்வு வந்திருந்தால் வாங்க 10 பேருக்கு இன்டர்வியூ வந்துவிடுகிறது. அந்த பத்து பேரில் ஒருவர் தான் தகுதியான ஆளாக வருகிறார்கள். எங்களால் முடிந்தவரை பத்து பேரில் ஒரு ஆளாக உங்களைக் கொண்டு போவதற்கான சூழ்நிலையை நாங்கள் எல்லாம் முன்னிருந்து வேலை பார்ப்போம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.என பேசினார்.Conclusion:
Last Updated : Aug 24, 2019, 12:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.