ETV Bharat / state

இரண்டு நாட்கள் தளர்வு: சொந்த ஊருக்கு செல்ல பேருந்துநிலையத்தில் குவிந்த பயணிகள்!

author img

By

Published : May 23, 2021, 7:30 AM IST

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மட்டும் பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் பேருந்து நிலையத்தில் குவித்தனர்.

திண்டுக்கல்
திண்டுக்கல்

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவுவதை அடுத்து நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மளிகை காய்கறி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏழு நாட்கள் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கில், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கவேண்டும் என இன்று (மே 22) அறிவித்தது. அதற்கான முன்னேற்பாடாக, 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வெளியூருக்கு செல்லும் பயணிகளுக்காக இரண்டு நாட்கள் பேருந்து சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெளியூர்களுக்குச் செல்ல திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவுவதை அடுத்து நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மளிகை காய்கறி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏழு நாட்கள் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கில், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கவேண்டும் என இன்று (மே 22) அறிவித்தது. அதற்கான முன்னேற்பாடாக, 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வெளியூருக்கு செல்லும் பயணிகளுக்காக இரண்டு நாட்கள் பேருந்து சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெளியூர்களுக்குச் செல்ல திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.