ETV Bharat / state

சமையல் எரிவாயு உருளை வெடித்து தாய், மகள் காயம் - திண்டுக்கல் சிலிண்டர் விபத்து

திண்டுக்கல்: பேருந்து நிலையில் அருகே குடியிருப்புப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் தாய், மகள் காயமடைந்தனர்.

Dindigul Cylinder blast,திண்டுக்கல் சிலிண்டர் விபத்து
Dindigul Cylinder blast
author img

By

Published : Dec 10, 2019, 4:01 PM IST

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார்.

இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், கதவு ஜன்னல்கள் உடைந்து சமைத்துக் கொண்டிருந்த அங்குலட்சுமி, துவைத்துக் கொண்டிருந்த பாக்கியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து நடந்த வீடு

பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மயங்கிய நிலையிலிருந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க : ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார்.

இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், கதவு ஜன்னல்கள் உடைந்து சமைத்துக் கொண்டிருந்த அங்குலட்சுமி, துவைத்துக் கொண்டிருந்த பாக்கியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து நடந்த வீடு

பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மயங்கிய நிலையிலிருந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க : ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!

Intro:திண்டுக்கல் 10.12.19

விஎம்ஆர் பட்டியில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு பெண்கள் காயம்.

Body:திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள விஎம்ஆர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (வயது 70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்து கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் எரிவாயு கசிந்து திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததில் கதவு ஜன்னல்கள் உடைந்து சமைத்துக் கொண்டிருந்த அங்குலட்சுமி மற்றும் பாக்கியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பயங்கர சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விசாரணையில் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு இணைக்கப்பட்டிருக்கும் டியூபில் எரிவாயு கசிந்து வீட்டில் பரவியதால் வெடி சத்தத்துடன் விபத்து நடந்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.