ETV Bharat / state

திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் நாசம்! - Cylinder explodes in Dindigul

திண்டுக்கல்: கள்ளிமந்தையம் அருகே சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

fire accident
fire accident
author img

By

Published : Jan 2, 2020, 10:25 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்லாங்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். முருகேசன், அவரது மாமியார் புஷ்பம் ஆகியோர் குடிசையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாட அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றனர்.

பின்னர், வீட்டில் அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பற்றியதால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இரண்டு குடிசைகள் முழுமையாக தீக்கிரையாயின. வீட்டிலிருந்த கார், ஒரு பைக், உடைகள், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உள்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

சிலிண்டர் வெடித்து சாம்பலான வீடு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். கூத்தம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்வேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கள்ளிமந்தையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்லாங்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். முருகேசன், அவரது மாமியார் புஷ்பம் ஆகியோர் குடிசையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாட அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றனர்.

பின்னர், வீட்டில் அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பற்றியதால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இரண்டு குடிசைகள் முழுமையாக தீக்கிரையாயின. வீட்டிலிருந்த கார், ஒரு பைக், உடைகள், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உள்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

சிலிண்டர் வெடித்து சாம்பலான வீடு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். கூத்தம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்வேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கள்ளிமந்தையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது!

Intro:திண்டுக்கல் .கள்ளிமந்தையம் அருகே சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் நாசம் ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின

Body:திண்டுக்கல் 01.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

கள்ளிமந்தையம் அருகே சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் நாசம் ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கூத்தம்பூண்டி ஊராட்சியை சேர்ந்த கல்லாங்காட்டுவலசு கிராமத்தில் குடியிருந்து வருபவர் முருகேஷ். இவர் தனியார் வாகன ஓட்டுனர். இவரும் இவரது மாமியார் புஷ்பம் ஆகியோர் குடிசையில் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டை கொண்டாட அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். குடிசை வீட்டில் அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இரண்டு குடிசைகளும் முழுமையாக தீக்கிரையாயின. வீட்டிலிருந்த ஒரு கார், ஒரு பைக், உடைகள், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உள்பட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். கூத்தம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்வேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளிமந்தையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகே சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் நாசம் ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.