ETV Bharat / state

350 கோடி ஊழல் பற்றி கவலையில்லாத முதலமைச்சர் - முத்தரசன் வேதனை

author img

By

Published : Oct 8, 2019, 11:23 PM IST

Updated : Oct 9, 2019, 8:27 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு காவல்துறையில் 350 கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்துள்ளது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையின்றி இருப்பது வேதனையளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

cpi mutharasan

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அளவிலான அரசியல், அமைப்பு நிலை பயிலரங்கம் பழனியருகே உள்ள தொப்பம்பட்டியில் இன்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய குழு உறுப்பினர்கள் தா.பாண்டியன், நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சாதாரண மக்களுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையே காரணம்.

மத்திய அரசு ரயில் சேவையையும், தமிழ்நாடு அரசு மின்சார பேருந்துகளையும் தனியார் மயமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மேலும், இதன்மூலம் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

சிபிஐ முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறைக்கு தேவையான தகவல் தொடர்பு சாதனங்களை 350 கோடி ரூபாய் அளவில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதனைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ, வெட்கமோ படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோரின் ஆதரவோடுதான் இந்த ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதில் உடனடியாக அரசு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு சிபிஐ விசாரணை தேவை " என்றார்.

இதையும் படிங்க: 'வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல' - ராமதாஸ் காட்டமான அறிக்கை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அளவிலான அரசியல், அமைப்பு நிலை பயிலரங்கம் பழனியருகே உள்ள தொப்பம்பட்டியில் இன்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய குழு உறுப்பினர்கள் தா.பாண்டியன், நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சாதாரண மக்களுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையே காரணம்.

மத்திய அரசு ரயில் சேவையையும், தமிழ்நாடு அரசு மின்சார பேருந்துகளையும் தனியார் மயமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மேலும், இதன்மூலம் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

சிபிஐ முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறைக்கு தேவையான தகவல் தொடர்பு சாதனங்களை 350 கோடி ரூபாய் அளவில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதனைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ, வெட்கமோ படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோரின் ஆதரவோடுதான் இந்த ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதில் உடனடியாக அரசு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு சிபிஐ விசாரணை தேவை " என்றார்.

இதையும் படிங்க: 'வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல' - ராமதாஸ் காட்டமான அறிக்கை

Intro:திண்டுக்கல். 08.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையில் 350கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்துள்ளது என்பதை பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ வெட்கமோ படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்Body:திண்டுக்கல். 08.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையில் 350கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்துள்ளது என்பதை பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ வெட்கமோ படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அளவிலான அரசியல், அமைப்பு நிலை பயிலரங்கம் பழனியருகே உள்ள தொப்பம்பட்டியில் தொடங்கியது.ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது :-

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சாதாரண மக்களுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையே காரணம் என்றும், தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல்,டீசல் விலைஏற்றத்தால் விலைவாசி ஏறியுள்ளது என்றும், மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில், குறிப்பாக மத்திய அரசு ரயில்சேவையையும், தமிழகஅரசு மின்சார பேருந்துகளையும் தனியார் மயமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது தவறு என்றும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் முத்தரசன் தெரிவித்தார். தெலுங்கானாவில் 48ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்தது சந்திரசேகரராவின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது என்றும், தொழிலாளர்சங்க நிர்வாகிகளை அழைத்து ஜனநாயக முறைப்படி பேசியிருக்க வேண்டும் என்றும், இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், தமிழகத்தில் ஜெயலலிதா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு தோல்வி அடைந்ததையும் சந்திரசேகரராவ் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையில் 350கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்துள்ளது என்பதை பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ வெட்கமோ படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும், இது சாதாரண அதிகாரிகளால் மட்டும் செய்யமுடியாது, அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவின்றி செய்யமுடியாது என்றும், இதில் உடனடியாக கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். இதேபோல மத்திய அரசு பல கடுமையான அருவருக்கத்தக்க சோதனைகளை செய்து நீட் நுழைவுத்தேர்வு போட்டிகளை நடத்தியும் அதில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்திலும் உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதற்கு சிபிஐ விசாரணை தேவை என்றும் முத்தரசன் தெரிவித்தார். மத்திய மாநில அரசுகளின் இதுபோன்ற மக்கள் விரோத ஆட்சியை மக்களிடம் எடுத்துரைத்து
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் மத்திய மாநில அரசுகளுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை 5நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த பயிலறங்கத்தில்
அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய குழு உறுப்பினர்கள் தா.பாண்டியன், நல்லகண்ணு, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.Conclusion:திண்டுக்கல். 08.09.19
தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையில் 350கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்துள்ளது என்பதை பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ வெட்கமோ படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி
Last Updated : Oct 9, 2019, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.