ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையோ இப்படி... தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததோ அப்படி...! - conflict in winning announcement in dindigul

திண்டுக்கல்: அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றிபெற்றதாக அறிவிக்காத தேர்தல் அலுவலர்களைக் கண்டித்து சுயேச்சை வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

dindigul local body elections  conflict in winning announcement in dindigul  கிருஷ்ணவேணி என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்
conflict in winning announcement in dindigul
author img

By

Published : Jan 3, 2020, 9:56 AM IST

திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கிருஷ்ணவேணி என்பவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இதேபோல் மீனாட்சி என்பவரும் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணவேணி இரண்டாயிரத்து 387 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதேபோல் மீனாட்சி இரண்டாயிரத்து 162 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் கிருஷ்ணவேணி வெற்றி வேட்பாளராக அறிவிக்காமல், மீனாட்சியை வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.

இது குறித்து கிருஷ்ணவேணி மகன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையின் முன்னணியிலிருந்த தனது தாயாரை விடுத்து குறைவான வாக்குகள் பெற்ற மீனாட்சியை வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது என்றார். இது ஜனநாயக நாடு எனக் கூறிய அவர், ஆளும் கட்சியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கலாமா என ஆவேசமாகக் கேள்வியெழுப்பினார்.

வாக்கு எண்ணிக்கையில் வெற்றி... தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததோ

மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் அலுவலர்களிடம் கிருஷ்ணவேணி ஆதரவாளர்கள் நியாயம் கேட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்னர் சரியாக வாக்குகள் எண்ணப்பட்ட பின்புதான் வெற்றிபெற்ற நபரின் பெயர் அறிவிக்கப்பட்டது என அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடப்போவதாக கிருஷ்ணவேணி தரப்பில் தெரிவித்தனர்.

திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கிருஷ்ணவேணி என்பவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இதேபோல் மீனாட்சி என்பவரும் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணவேணி இரண்டாயிரத்து 387 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதேபோல் மீனாட்சி இரண்டாயிரத்து 162 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் கிருஷ்ணவேணி வெற்றி வேட்பாளராக அறிவிக்காமல், மீனாட்சியை வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.

இது குறித்து கிருஷ்ணவேணி மகன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையின் முன்னணியிலிருந்த தனது தாயாரை விடுத்து குறைவான வாக்குகள் பெற்ற மீனாட்சியை வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது என்றார். இது ஜனநாயக நாடு எனக் கூறிய அவர், ஆளும் கட்சியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கலாமா என ஆவேசமாகக் கேள்வியெழுப்பினார்.

வாக்கு எண்ணிக்கையில் வெற்றி... தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததோ

மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் அலுவலர்களிடம் கிருஷ்ணவேணி ஆதரவாளர்கள் நியாயம் கேட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்னர் சரியாக வாக்குகள் எண்ணப்பட்ட பின்புதான் வெற்றிபெற்ற நபரின் பெயர் அறிவிக்கப்பட்டது என அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடப்போவதாக கிருஷ்ணவேணி தரப்பில் தெரிவித்தனர்.

Intro:திண்டுக்கல் 2.2.2020

வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் தள்ளுமுள்ளுBody:திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு கிருஷ்ணவேணி என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதேபோல் மீனாட்சி என்பவரும் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் கிருஷ்ணவேணி 2,387 வாக்குகள் பெற்றுள்ளார். இதேபோல் மீனாட்சி 2,162 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் கிருஷ்ணவேணி வெற்றி வேட்பாளராக அறிவிக்காமல், மீனாட்சியை வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணவேணி மகன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை முன்னனியில் இருந்த எனது தாயாரை விடுத்து குறைவான வாக்குகள் பெற்ற மீனாட்சியை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. இது ஜனநாயக நாடு. ஆளும் கட்சியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாமா என்று கூறினார்.

மேலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சரியாக வாக்குகள் எண்ணப்பட்ட பின்புதான் வெற்றி பெற்ற நபரின் பெயர் அறிவிக்கப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாட போவதாக கிருஷ்ணவேணி தரப்பில் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.