திண்டுக்கல்: கள்ளிமந்தையம் அருகே நேற்று (ஜூன்14) திருப்பூரிலிருந்து மதுரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்காட்டான்வலசு பிரிவு அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுனர் வேல்முருகனும், திருமுருகன் என்பவரும் காரில் இருந்து வெளியேறி தப்பினர்.
அப்போது அவ்வழியாக வந்த உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உடனடியாக அவரது காரை நிறுத்தி நேரில் சென்று காரில் வந்தவர்களிடம் நடந்தவை குறித்து விசாரித்தார்.