ETV Bharat / state

மலை நெல் விவசாயம் அழிந்துபோகாமல் இருக்க அரசு முயற்சிக்கவேண்டும் என பூண்டி கிராம மக்கள் கோரிக்கை

author img

By

Published : Aug 12, 2022, 4:39 PM IST

கொடைக்கானல் மலைப்பகுதியில் அழிந்து மலை நெற்பயிர்கள் அழிந்து போகாமல் இருக்க அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என பூண்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

மலை நெற்பயிர்கள் அழிந்து போகாமல் இருக்க அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்- பூண்டி கிராம மக்கள் கோரிக்கை!
மலை நெற்பயிர்கள் அழிந்து போகாமல் இருக்க அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்- பூண்டி கிராம மக்கள் கோரிக்கை!

திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். நகர் பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக்கவர்வதற்காக நிறைய இடங்கள் இருந்தாலும் கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களில் சிறப்பாக விளங்குவது இங்கு இருக்கக்கூடிய மலைக்கிராம விவசாயம் தான். தரைத்தலங்களைப்போன்று அல்லாது மலைப்பகுதியில் விவசாயம் அடுக்கு விவசாயப் பகுதிகளாகவே இருக்கும்.

இந்த விவசாய நிலங்களில் மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு விவசாயம் இங்கு பிரசித்திபெற்ற விவசாயமாக இருந்து வருகிறது. மலைப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு எப்போதுமே தனி மவுசும் பல இடங்களில் உண்டு. இதனை ஆங்கில காய்கறிகள் என்றும் கூட அழைப்பார்கள். தமிழர்களுக்கு என்று தனி பெருமையாக இருக்கக்கூடியதில் நெல் முக்கியப்பங்கு வகித்து வருகிறது. ஆனால், மலைப்பகுதியில் இதுவரை நெல் விவசாயம் பெரிய அளவில் செய்யப்படுவதில்லை. மலை நெல் விவசாயமும் அழிந்துவிட்டது.

கொடைக்கானலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது தான் பூண்டி என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். இங்கு இயற்கை விவசாயத்திற்குப் பஞ்சமே இருக்காது. நெல் விவசாயம் தரைத்தலங்களில் மட்டும் இருந்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில் மலைப்பகுதியில் மறைந்துபோன, இந்த ’’மலை நெல்’’ விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது, பாரம்பரிய குடும்பம் ஒன்று. மலைப்பாங்கான விவசாய நிலத்தில் நெல் மணிகளைப் பயிரிட்டு பத்து மாதங்கள் அதனைப் பாதுகாத்து, தற்போது அறுவடைக்கும் தயாராக செய்திருக்கிறார்கள்.

தரைத்தலங்களில் இருக்கக்கூடிய நெற்பயிர்களுக்கும் மழைப்பகுதியில் தற்போது விளையக்கூடிய இந்த நெற்பயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தரை தலங்களில் இருக்கக்கூடிய நெற்பயிர்கள் மூன்று மாதங்களில் அறுவடைக்குத்தயாராகும். ஆனால் மலைப்பகுதியில் விளையக்கூடிய இந்த நெற்பயிர்கள் 10 மாதங்களுக்குப்பிறகு தான் அறுவடைக்குத் தயாராகிறது. விற்பனைக்காக செய்ய முடியாத நிலை இருந்தாலும் பாரம்பரியம் விட்டுப்போகக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விவசாயத்தை மேற்கொண்டு தற்போது கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

எந்தப்பகுதியிலும் விளையாத கருங்குருவை, செங்குருவை ஆகிய இரண்டு வகையான நெற்பயிர்கள் இங்கு பயிரிடப்பட்டு இருக்கிறது. முதலில் சுப்பிரமணி என்ற முதியவர் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். இந்த ஆண்டு இந்த நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக ஏழு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள் அழிந்துபோன வகையான நெற்பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வைத்துள்ளனர். இந்த மழையில் ஏழு அடி வரை வளரும்.

மேலும் இந்த கருங்குருவை, செங்குருவை அரிசிகளுக்கு மேலும் ஒரு சிறப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. ஒரு முறை இந்த அரிசியை சாப்பிட்டால் மூன்று முறை சாப்பிடத்தேவையில்லை. அந்த அளவிற்கு உணவுச்சத்து இந்த அரிசியில் இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

மலை நெல் விவசாயம் அழிந்துபோகாமல் இருக்க அரசு முயற்சிக்கவேண்டும் என பூண்டி கிராம மக்கள் கோரிக்கை

குடும்பத்துடன் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்காக நெல்மணிகளை விவசாயம் செய்துவருவது போன்று அழிந்து போனமலை நெல்லை மற்ற விவசாயிகளும் பயிரிட வேண்டும். மலை நெல்லை காப்பாற்றுவதற்காக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:முதன்முறையாக மக்கள் வாழ்விட பகுதியில் தங்கம் - சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு

திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். நகர் பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக்கவர்வதற்காக நிறைய இடங்கள் இருந்தாலும் கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களில் சிறப்பாக விளங்குவது இங்கு இருக்கக்கூடிய மலைக்கிராம விவசாயம் தான். தரைத்தலங்களைப்போன்று அல்லாது மலைப்பகுதியில் விவசாயம் அடுக்கு விவசாயப் பகுதிகளாகவே இருக்கும்.

இந்த விவசாய நிலங்களில் மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு விவசாயம் இங்கு பிரசித்திபெற்ற விவசாயமாக இருந்து வருகிறது. மலைப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு எப்போதுமே தனி மவுசும் பல இடங்களில் உண்டு. இதனை ஆங்கில காய்கறிகள் என்றும் கூட அழைப்பார்கள். தமிழர்களுக்கு என்று தனி பெருமையாக இருக்கக்கூடியதில் நெல் முக்கியப்பங்கு வகித்து வருகிறது. ஆனால், மலைப்பகுதியில் இதுவரை நெல் விவசாயம் பெரிய அளவில் செய்யப்படுவதில்லை. மலை நெல் விவசாயமும் அழிந்துவிட்டது.

கொடைக்கானலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது தான் பூண்டி என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். இங்கு இயற்கை விவசாயத்திற்குப் பஞ்சமே இருக்காது. நெல் விவசாயம் தரைத்தலங்களில் மட்டும் இருந்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில் மலைப்பகுதியில் மறைந்துபோன, இந்த ’’மலை நெல்’’ விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது, பாரம்பரிய குடும்பம் ஒன்று. மலைப்பாங்கான விவசாய நிலத்தில் நெல் மணிகளைப் பயிரிட்டு பத்து மாதங்கள் அதனைப் பாதுகாத்து, தற்போது அறுவடைக்கும் தயாராக செய்திருக்கிறார்கள்.

தரைத்தலங்களில் இருக்கக்கூடிய நெற்பயிர்களுக்கும் மழைப்பகுதியில் தற்போது விளையக்கூடிய இந்த நெற்பயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தரை தலங்களில் இருக்கக்கூடிய நெற்பயிர்கள் மூன்று மாதங்களில் அறுவடைக்குத்தயாராகும். ஆனால் மலைப்பகுதியில் விளையக்கூடிய இந்த நெற்பயிர்கள் 10 மாதங்களுக்குப்பிறகு தான் அறுவடைக்குத் தயாராகிறது. விற்பனைக்காக செய்ய முடியாத நிலை இருந்தாலும் பாரம்பரியம் விட்டுப்போகக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விவசாயத்தை மேற்கொண்டு தற்போது கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

எந்தப்பகுதியிலும் விளையாத கருங்குருவை, செங்குருவை ஆகிய இரண்டு வகையான நெற்பயிர்கள் இங்கு பயிரிடப்பட்டு இருக்கிறது. முதலில் சுப்பிரமணி என்ற முதியவர் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். இந்த ஆண்டு இந்த நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக ஏழு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள் அழிந்துபோன வகையான நெற்பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வைத்துள்ளனர். இந்த மழையில் ஏழு அடி வரை வளரும்.

மேலும் இந்த கருங்குருவை, செங்குருவை அரிசிகளுக்கு மேலும் ஒரு சிறப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. ஒரு முறை இந்த அரிசியை சாப்பிட்டால் மூன்று முறை சாப்பிடத்தேவையில்லை. அந்த அளவிற்கு உணவுச்சத்து இந்த அரிசியில் இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

மலை நெல் விவசாயம் அழிந்துபோகாமல் இருக்க அரசு முயற்சிக்கவேண்டும் என பூண்டி கிராம மக்கள் கோரிக்கை

குடும்பத்துடன் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்காக நெல்மணிகளை விவசாயம் செய்துவருவது போன்று அழிந்து போனமலை நெல்லை மற்ற விவசாயிகளும் பயிரிட வேண்டும். மலை நெல்லை காப்பாற்றுவதற்காக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க:முதன்முறையாக மக்கள் வாழ்விட பகுதியில் தங்கம் - சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.