ETV Bharat / state

40,000 ஆண்டுகள் பழமையான நினைவு சின்னம் கண்டுபிடிப்பு! - கல்திட்டை

திண்டுக்கல்: பழனி அருகே பொன்னிமலை கரடு என்ற மலையில் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நினைவு சின்னத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

stone age boulders
author img

By

Published : Jul 29, 2019, 7:32 PM IST

Updated : Jul 29, 2019, 9:32 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி என்ற பகுதியில் அமைந்துள்ள பொன்மலை கரடு மலை அடிவாரத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையிலான தலைமையிலான குழுவினர் அகழாய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மலையின் வடகிழக்கு மூலையில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால நினைவு சின்னம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இயற்கையான ஒரு பாறையின் மீது இரண்டு உருண்டை பாறாங்கற்களை வைத்து, அவற்றின் மீது இன்னொரு மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து 'ஃ' வடிவில் அந்த நினைவுச் சின்னமானது அமைந்துள்ளது.

பொம்மலையில் கண்டறியப்பட்ட பொருங்கற்கால நினைவுச்சின்னம்

இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருங்கற்கால சின்னங்கள் 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னிமலை கரடில் கண்டறியப்பட்டுள்ள இந்த நினைவு சின்னமானது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர் நாராயண மூர்த்தி வியப்புடன் தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலிய பழங்குடிகளோடு தமிழர்கள் கொண்டிருக்கும் ரத்த உறவையும் இந்த நினைவு சின்னமானது உறுதிபடுத்துவதாக அவர் கூறினார்.

தமிழர்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறும் அபூர்வ தகவல்கள்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி என்ற பகுதியில் அமைந்துள்ள பொன்மலை கரடு மலை அடிவாரத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையிலான தலைமையிலான குழுவினர் அகழாய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மலையின் வடகிழக்கு மூலையில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால நினைவு சின்னம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இயற்கையான ஒரு பாறையின் மீது இரண்டு உருண்டை பாறாங்கற்களை வைத்து, அவற்றின் மீது இன்னொரு மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து 'ஃ' வடிவில் அந்த நினைவுச் சின்னமானது அமைந்துள்ளது.

பொம்மலையில் கண்டறியப்பட்ட பொருங்கற்கால நினைவுச்சின்னம்

இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருங்கற்கால சின்னங்கள் 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னிமலை கரடில் கண்டறியப்பட்டுள்ள இந்த நினைவு சின்னமானது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர் நாராயண மூர்த்தி வியப்புடன் தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலிய பழங்குடிகளோடு தமிழர்கள் கொண்டிருக்கும் ரத்த உறவையும் இந்த நினைவு சின்னமானது உறுதிபடுத்துவதாக அவர் கூறினார்.

தமிழர்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறும் அபூர்வ தகவல்கள்
Intro:திண்டுக்கல் மாட்டம் பழனி அருகே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருங்கற்கால நினைவுச்சின்னம் கண்டுபிடிப்பு.

இந்த ஆய்வில் ஆஸ்திரேலியா பழங்குடிகளின் சின்னத்தை ஒத்துள்ளது.


Body:திண்டுக்கல்.28.07.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


பழனிஅருகே ஆயக்குடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருங்கற்கால நினைவுச்சின்னம் கண்டு பிடிப்பு .
ஆஸ்திரேலியா பழங்குடிகளின் சின்னத்தை ஒத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி .பொன்மலை வனப்பகுதி இந்த வனப்பகுதி இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச்சின்னம் கண்டுபிடிக்க பட்டது .
இதை கண்டுபிடித்த தொல்லியல் துறைஆய்வாளர் நாராயனமூர்த்தி.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜரவிவர்மா .பழனிஆண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டு த்துறைப்ப பேராசிரியர் முனைவர் அசோகன் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆகியோர் இந்த சின்னத்தை கண்டறிந்து துள்ளது.
மலையின் ஒருபகுதியாக உள்ளது பொன்னிமலை .சங்க காலத்திலேயே ஆய்வேளிர் என்ற குடியினர் இப்பகுதியில் வாழ்வதர்க்கான தடயத்தை இந்த ஆய்வு குழு கண்டறிந்து அதை வெளிப்படுத்தி வந்தனர்.அதன் தொடர்ச்சியாக பொன்னிமலை யில் ஆய்வை மோற்கொண்டதில் .
இந்த பொன்னி மலை உச்சியின் கிழக்கு மூலையில் உள்ள அடிவார பகுதியில் ஒரு பெருங்கற்கால நினைவு ச்சின்னம் இருப்தை கண்டரிந்து .இது கல் திட்டை அல்லது கல்மேடை வகையை சேர்ந்து.இந்த சின்னம் தமிழ் ஆயுத எழுத்தான ஃ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது .பெருங்காலத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது பெருங்கற்காலக் காலகட்டம் என்பது நாட்க்கு நாடு மாறுபடுகிறது.தமிழகத்தில் பெருங்க்கற்கால கட்டத்தைத் தீர்மாணப்பதில் தொல்லியல் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது எனினும் பொதுவாக சுமார் 3000. ஆண்டுகள் வரையிலான காலத்தை பெருங்க்கற்காலம் என்று அழைக்கிறார்கள்.
பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இக் காலத்தை பெருங்கற்காலம் என்று அழைக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் வாழ்ந்து இறந்து போனவர்களின் நினைவாக இறந்த இடத்திலியே அல்லது வேறு இடத்திலோ அவர்களுக்காக நினைவுச்சின்னம் எழுப்பும் வழக்கம் உலகம் முழுதும் இருந்துள்ளது.
அவ்வாறான பெருங்க்கற்காலத்தில் இறந்துபோன ஒருவரின் நினைவாக இந்த ஆய்க்குடி பொன்னிமலை சின்னம் எழுப்ப்பட்டுள்ளது.
இயற்கையான ஒரு பாறையின் மீது இரண்டு உருண்டை பாறாங்கற்களை வைத்து அந்த கற்களை இனைக்க அதன் மேல் ஒருமிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து இந்த சின்னத்தை அமைத்துள்ளனர் அத்துடன் பாறாங்கற்களுக்க இடையே சிறிய கல்தக்கை களையும் பிடி மானத்திற்க்கு பொருத்தியுள்ளனர் சுமார் 5. டன் எடையுள்ள பாறாங்கற்களை அமைத்த விதம் வியப்பையும் .இதன் பிரமாண்டம் திகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற ஒருசின்னம் ஆஸ்திரேலியவில் உள்ள 'ஊரு'என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது "ஊர்" என்பது தமிழ்ச் சொல் .அங்கு வாழும் ஆஸ்திரேலியா பழங்குடிகள் பேசும் மொழியும் தமிழை ஒத்துள்ளது. அந்த பழங்குடிகளின் நிறம் ,உருவ அமைப்பு பழக்க வழக்கங்கள் அனைத்து தமிழர் களையே ஒத்துள்ளன .
கடல் கொண்ட குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாவின் கிழக்கு பகுதியே ஆஸ்திரேலியா என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா ஊரு நினைவுச் சின்னம் ஆயக்குடி பொன்னிமலை நினைவுச்சின்னத்தை அச்சு அசலாக ஒத்திருப்பதால் ஆஸ்திரேலியப் பலங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றலே என்று கணிக்கலாம்.
தமிழர்களின் பண்டைய ஆயுதமான வளரி என்பதும் ஆஸ்திரேலியா வயப் பழங்குடிகளின் பூமராங் என்பதும் ஒரே வடிவானவை .தமிழக சங்க கால .இரவிமங்கலம் புதை குழிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் அமைக்ப்பட்டிருந்த குறியீடுகளுடன் நூறு சதவிகிதம் பொருந்து கின்றன.
அன்மையில் ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடம் .தமிழர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட m130 வகையிலான dna பரிசோதனைகள் இருவருக்குமிடையேயான இரத்த உறவுகளை உறுதி செய்துள்ளன.

ஆஸ்திரேலியா நினைவுச்சின்னத்தை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் 30000 வருடங்கள் முதல் 50000 வருடங்களாக் கணித்திருக்கிறார்கள் .அண்மையில் ஆஸ்திரேலியவில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வு களில் அந்த பழங்குடிகளின் புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் காலம் 7500_-முதல் 8000 வருடங்களாக இருக்கும் என்று கனிக்கப்பட்டுள்ளது .எனவே ஒப்பிட்டுக் கால கணிப்பு அடைப்படையில் ஆயக்குடி சின்னத்தின் காலத்தையும் இதைஒட்டியே கணிக்கலாம் .எதற்கெடுத்தாலும். எப்போதும் .2000,3000 என்று ஆண்டுகளைக் கணித்து கொண்டிருக்காமல் ,அறிவியல் முறைப்படி இதைபோன்ற சின்னங்களின் காலத்தை ஆய்வு செய்து உறுதிப்படுத்த நம் அரசுகள் உதவ வேண்டும் .அவ்வாறு தொல்லியல் அறிவியல் முறைப்படி ஆய்வு காலம் கணிக்கப்பட்டால் .தமிழ் மொழியின் தோன்மையை 80000 ஆண்டுகளுக்கு முன்பு செல்லமுடியும் .அத்துடன் நிலவியலாளர்களின் கண்களின் நகர்வு கொள்கைக்கும் .லெமூரிய ஆய்வுக்கும் இந்த ஆய்குடி நினைவுச் சின்னம் உலகெங்கும் பயனபடும் .

பேட்டி :நாராயணமூர்த்தி .தொல்லியல் ஆய்வாளர் பழனி



Conclusion:திண்டுக்கல் அருகே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால நினைவுச்சின்னம் கண்டுபிடிப்பு குறித்த செய்தி
Last Updated : Jul 29, 2019, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.