ETV Bharat / state

டேக்வாண்டோ: தங்கம் வென்ற மாணவர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு! - டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு!

திண்டுக்கல்: தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.

டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள்
டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள்
author img

By

Published : May 1, 2021, 2:33 PM IST

அகில இந்திய டேக்வாண்டோ போட்டிகள் கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இது குறித்து சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தின் மாஸ்டர் பிரேம்நாத் அளித்த பேட்டியில்,

"தமிழ்நாட்டின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற 40 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் மாணவர்கள் தருண் அஜய், வேதேஷ் என்ற இரண்டு மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இதேபோல மணிகண்டன், மதுபாலா ஆகிய இருவரும் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு சான்றிதழும் வென்றனர்.

டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு!

அதேபோல் சர்வதேச அளவில் நடைபெற்ற ஐந்தாவது கறுப்பு பட்டயத்திக்கான தேர்வு கொரியா நாட்டின் சார்பில் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு கடந்த மாதம் நடைபெற்றது.

அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக கலந்துகொண்டு தேர்வுபெற்று ஐந்தாவது கறுப்பு பட்டயம் ( BLACK BELT) பெற்றுள்ளேன்" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, டேக்வோண்டா வீரர், வீராங்கனைகளையும், மாஸ்டர் பாராட்டி கௌரவித்தார். இதில் பெற்றோர்கள், நடுவர்கள், டேக்வாண்டோ, கராத்தே மாஸ்டர்கள் பலர் கலந்துகொண்டு பாராட்டி கௌரவித்தனர்.

இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி!

அகில இந்திய டேக்வாண்டோ போட்டிகள் கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இது குறித்து சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தின் மாஸ்டர் பிரேம்நாத் அளித்த பேட்டியில்,

"தமிழ்நாட்டின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற 40 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் மாணவர்கள் தருண் அஜய், வேதேஷ் என்ற இரண்டு மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இதேபோல மணிகண்டன், மதுபாலா ஆகிய இருவரும் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு சான்றிதழும் வென்றனர்.

டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு!

அதேபோல் சர்வதேச அளவில் நடைபெற்ற ஐந்தாவது கறுப்பு பட்டயத்திக்கான தேர்வு கொரியா நாட்டின் சார்பில் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு கடந்த மாதம் நடைபெற்றது.

அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக கலந்துகொண்டு தேர்வுபெற்று ஐந்தாவது கறுப்பு பட்டயம் ( BLACK BELT) பெற்றுள்ளேன்" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, டேக்வோண்டா வீரர், வீராங்கனைகளையும், மாஸ்டர் பாராட்டி கௌரவித்தார். இதில் பெற்றோர்கள், நடுவர்கள், டேக்வாண்டோ, கராத்தே மாஸ்டர்கள் பலர் கலந்துகொண்டு பாராட்டி கௌரவித்தனர்.

இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.