ETV Bharat / state

மீண்டும் ஒரு களிமேடு - பற்றி எரிந்த கார்; ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு!

author img

By

Published : May 2, 2022, 10:59 PM IST

பழனி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் காரை ஓட்டி வந்தவர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்து
கார் விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வாகரையில் தொப்பம்பட்டி-கள்ளிமந்தயம் சாலையில் இன்று (மே.02) மாலையில் கார் ஒன்று சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின்மீது மோதியது.

இதில் மின்கம்பம் கார் மீது சாய்ந்து கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபர் ஒருவர் காரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார். இதனை அடுத்து கார் விபத்துக்குள்ளான சத்தம்கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காரின் அருகே செல்லமுடியாத அளவிற்கு தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும்‌, கள்ளிமந்தயம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்‌ மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காந்தபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ்பாபு (45) என்பது செரியவந்தது.

பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் பழனிக்கு சென்றுவிட்டு பாலப்பன்பட்டிக்கு மீண்டும் காரில் செல்லும்போது வாகரை அருகே விபத்து ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 2 கர்ப்பிணிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வாகரையில் தொப்பம்பட்டி-கள்ளிமந்தயம் சாலையில் இன்று (மே.02) மாலையில் கார் ஒன்று சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின்மீது மோதியது.

இதில் மின்கம்பம் கார் மீது சாய்ந்து கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபர் ஒருவர் காரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார். இதனை அடுத்து கார் விபத்துக்குள்ளான சத்தம்கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காரின் அருகே செல்லமுடியாத அளவிற்கு தீப்பற்றி எரிந்ததால் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும்‌, கள்ளிமந்தயம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்‌ மற்றும் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காந்தபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ்பாபு (45) என்பது செரியவந்தது.

பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் பழனிக்கு சென்றுவிட்டு பாலப்பன்பட்டிக்கு மீண்டும் காரில் செல்லும்போது வாகரை அருகே விபத்து ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 2 கர்ப்பிணிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.