ETV Bharat / state

திண்டுக்கல் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்:  கொடைரோடு அருகே இரு கார்கள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

author img

By

Published : Jan 25, 2020, 9:20 PM IST

5 member died in car smashed accident at dindugal highways
திண்டுக்கல் கார் விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று சைக்கிளில் சாலையை கடக்கமுயன்ற முதியவர் மீது மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைக் கடந்து எதிரே உள்ள சாலையில் நுழைந்தது.

நிலைதடுமாறி சென்ற அந்தக் கார், திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் கார் விபத்து

மேலும், சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற முதியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காரில் பயணித்த மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று சைக்கிளில் சாலையை கடக்கமுயன்ற முதியவர் மீது மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைக் கடந்து எதிரே உள்ள சாலையில் நுழைந்தது.

நிலைதடுமாறி சென்ற அந்தக் கார், திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் கார் விபத்து

மேலும், சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற முதியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காரில் பயணித்த மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அம்மைய நாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Intro:திண்டுக்கல் 25.1.20

கொடைரோடு அருகே கார் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி.

Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கார் மீது கார் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் ஒன்று கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக அவ்வழியே சைக்கிளில் சாலையை கடந்த முதியவர் மீது கார் மோதியது. அதே வேகத்தில் அந்த கார் தடுப்பை கடந்து எதிரே ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இச்சம்பவத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், மைந்தன், ஜெயந்திலால்மணி, ஜெபக்கனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், சைக்கிளில் சாலையை கடந்த கொடைரோடு மாவுத்தம்பட்டியைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலியானார். மேலும் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் வந்த 4 பேர் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அம்மைய நாயக்கனூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்வதற்காக விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தினர்.

அப்போது அங்கு வந்த மீட்பு வாகனத்திலிருந்த இரும்பு சங்கிலி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து காவலர் பெருமாள் தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்ததால் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.