ETV Bharat / state

அக். 1 முதல் ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

author img

By

Published : Sep 28, 2021, 10:15 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்த நிலையில், நேற்று பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி திறந்துவைத்தார்.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

தருமபுரி: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்த நிலையில், செப்டம்பர் 27 ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டிருந்தார்.

ஒகேனக்கல்

இந்த நிலையில், நேற்று (செப். 27) பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், "சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பக்கத்து மாநிலங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலிருந்து வருவதற்காகவும், இந்தச் சுற்றுலா மையத்தில் மகிழ்ச்சியோடு இருப்பதற்காகவும் மட்டுமே சுற்றுலா மையம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மீன் சமையல், ஆயில் மசாஜ் செய்துகொண்டு அருவியில் குளிப்பது இங்குச் சிறப்பான ஒன்று. அருவியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. அக்டோபா் 1ஆம் தேதிமுதல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலா மையம் பொருளாதார மேம்பாட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த வேண்டும். பயணிகளை ஈர்க்கும் வகையில், மனமகிழ் இடங்கள், பொழுதுபோக்கு மையங்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.

சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு மிகப்பெரிய அவசியமாக உள்ளது. அதிலும் பெண்களுக்கான பாதுகாப்பை முழுவதுமாக அதிகப்படுத்த வேண்டும். மேலும் அனைவரும் கரோனா நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இந்தத் திறப்பு விழாவில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்டேஸ்வரன் உடனிருந்தார்.

முதல் நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் செய்து ஒகேனக்கல் அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர்.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
அக்டோபர் 1ஆம் தேதிமுதல் ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

மடம் சோதனைச்சாவடி, ஒகேனக்கல் பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் கரோனா சோதனை சான்று காண்பித்த பின்பே சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதிக்கின்றனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி என்றவுடன் குளிக்க அனுமதி என நினைத்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் நீர்வரத்து நேற்று முன்தினம் (செப். 26) ஆறாயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று மூன்றாயிரம் கனஅடி அதிகரித்து ஒன்பதாயிரம் கனஅடியாக உள்ளது.

இதையும் படிங்க:'திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட வேண்டும்' - ஜெயக்குமார்

தருமபுரி: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்த நிலையில், செப்டம்பர் 27 ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டிருந்தார்.

ஒகேனக்கல்

இந்த நிலையில், நேற்று (செப். 27) பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், "சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பக்கத்து மாநிலங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலிருந்து வருவதற்காகவும், இந்தச் சுற்றுலா மையத்தில் மகிழ்ச்சியோடு இருப்பதற்காகவும் மட்டுமே சுற்றுலா மையம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மீன் சமையல், ஆயில் மசாஜ் செய்துகொண்டு அருவியில் குளிப்பது இங்குச் சிறப்பான ஒன்று. அருவியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. அக்டோபா் 1ஆம் தேதிமுதல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலா மையம் பொருளாதார மேம்பாட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த வேண்டும். பயணிகளை ஈர்க்கும் வகையில், மனமகிழ் இடங்கள், பொழுதுபோக்கு மையங்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.

சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு மிகப்பெரிய அவசியமாக உள்ளது. அதிலும் பெண்களுக்கான பாதுகாப்பை முழுவதுமாக அதிகப்படுத்த வேண்டும். மேலும் அனைவரும் கரோனா நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இந்தத் திறப்பு விழாவில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்டேஸ்வரன் உடனிருந்தார்.

முதல் நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் செய்து ஒகேனக்கல் அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர்.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
அக்டோபர் 1ஆம் தேதிமுதல் ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

மடம் சோதனைச்சாவடி, ஒகேனக்கல் பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் கரோனா சோதனை சான்று காண்பித்த பின்பே சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதிக்கின்றனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி என்றவுடன் குளிக்க அனுமதி என நினைத்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதன் நீர்வரத்து நேற்று முன்தினம் (செப். 26) ஆறாயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று மூன்றாயிரம் கனஅடி அதிகரித்து ஒன்பதாயிரம் கனஅடியாக உள்ளது.

இதையும் படிங்க:'திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட வேண்டும்' - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.