ETV Bharat / state

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

author img

By

Published : Oct 9, 2020, 2:36 PM IST

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

river
river

கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மலை பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது.

இதனால் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து நேற்று (அக். 8) மாலை 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

இந்நிலையில் இன்று 10 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து தற்போது நீர் வரத்து 20,000 கன அடியாக உள்ளது.

நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வரும் நீர் என்பதால் தண்ணீர் செம்மண் நிறமாக வருவதால் தண்ணீர் கலங்கலாகக் காணப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மலை பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது.

இதனால் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து நேற்று (அக். 8) மாலை 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

இந்நிலையில் இன்று 10 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து தற்போது நீர் வரத்து 20,000 கன அடியாக உள்ளது.

நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வரும் நீர் என்பதால் தண்ணீர் செம்மண் நிறமாக வருவதால் தண்ணீர் கலங்கலாகக் காணப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.