ETV Bharat / state

‘விவசாயக்கடன் தள்ளுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி’ - எஸ்.ஏ. சின்னசாமி

author img

By

Published : Feb 6, 2021, 12:34 PM IST

தர்மபுரி: விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பேராசிரியா் எஸ்.ஏ. சின்னசாமி கூறியுள்ளார்.

கடன் தள்ளுபடியை கொண்டாடிய விவசாய சங்கத்தினர்
கடன் தள்ளுபடியை கொண்டாடிய விவசாய சங்கத்தினர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 5) நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவசாயப் பயிர்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியிட்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, தர்மபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பேராசிரியா் எஸ்.ஏ. சின்னசாமி கூறுகையில், “கடுமையான வறட்சியாலும், மழை வெள்ளத்தாலும் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதனால், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்தத் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கடன் தள்ளுபடியைக் கொண்டாடிய விவசாய சங்கத்தினர்

நாளை விவசாய சங்கத்தின் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற உள்ளது. அவரின் பிறந்தநாள் நிகழ்வையொட்டி பிப்ரவரி 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருப்பது விவசாய சங்கத்திற்கும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமியின் புகழுக்கும் பெருமைசேர்ப்பதாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப். 5) நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவசாயப் பயிர்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியிட்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, தர்மபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பேராசிரியா் எஸ்.ஏ. சின்னசாமி கூறுகையில், “கடுமையான வறட்சியாலும், மழை வெள்ளத்தாலும் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதனால், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்தத் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கடன் தள்ளுபடியைக் கொண்டாடிய விவசாய சங்கத்தினர்

நாளை விவசாய சங்கத்தின் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற உள்ளது. அவரின் பிறந்தநாள் நிகழ்வையொட்டி பிப்ரவரி 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருப்பது விவசாய சங்கத்திற்கும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமியின் புகழுக்கும் பெருமைசேர்ப்பதாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.