ETV Bharat / state

என்னய்யா இது தமிழ் மொழிக்கு வந்த சோதனை...! - உ.பி.க்களால் நொந்த மக்கள்! - BAnner Mistake

தருமபுரி: குடியுரிமை சட்ட மசோதாவைக் கண்டித்து நடைபெற்ற திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், எழுத்துப் பிழை இருந்தது பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spelling Mistake in DMK Banner which Presented in Today Protest
Spelling Mistake in DMK Banner which Presented in Today Protest
author img

By

Published : Dec 17, 2019, 6:46 PM IST

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பேனர்களைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்தப் பேனரில் 'குடியுரிமை மசோதா மூலம் சிறுபாண்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு மண்ணிக்க முடியாத துரோகம் செய்யும் மத்திய பாஜக - அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' என அச்சிடப்பட்டிருந்தது.

சிறுபான்மையினர் இரண்டு சுழி(ன்)க்கு பதிலாக 'சிறுபாண்மையினர்' என்றும், மன்னிக்க என்ற சொல்லில் இரண்டு சுழி (ன்)க்கு பதிலாக 'மண்ணிக்க' என எழுத்துப் பிழையோடுப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

திமுக ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்

தமிழ்மொழி வளர்ச்சிக்காக திமுகவில் கலை இலக்கிய அணி என தனி ஒரு பிரிவு உள்ளது. தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கட்சியாக திமுக அறியப்படும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எழுத்துப்பிழை இருந்தது தொண்டர்கள், பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் பாண்டியராஜன் எங்கே? - தமிழிசை ஆய்வாளர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு!

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பேனர்களைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்தப் பேனரில் 'குடியுரிமை மசோதா மூலம் சிறுபாண்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு மண்ணிக்க முடியாத துரோகம் செய்யும் மத்திய பாஜக - அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' என அச்சிடப்பட்டிருந்தது.

சிறுபான்மையினர் இரண்டு சுழி(ன்)க்கு பதிலாக 'சிறுபாண்மையினர்' என்றும், மன்னிக்க என்ற சொல்லில் இரண்டு சுழி (ன்)க்கு பதிலாக 'மண்ணிக்க' என எழுத்துப் பிழையோடுப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

திமுக ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்

தமிழ்மொழி வளர்ச்சிக்காக திமுகவில் கலை இலக்கிய அணி என தனி ஒரு பிரிவு உள்ளது. தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கட்சியாக திமுக அறியப்படும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எழுத்துப்பிழை இருந்தது தொண்டர்கள், பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் பாண்டியராஜன் எங்கே? - தமிழிசை ஆய்வாளர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு!

Intro:தருமபுரி திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மொழிக்கு சோதனை .....Body:தருமபுரி திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மொழிக்கு சோதனை .....Conclusion:தருமபுரி திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மொழிக்கு சோதனை ......

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தருமபுரியில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில்ஆா்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பேனர் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் கையில் வைத்து இருந்த பேனரில் குடியுரிமை மசோதா மூலம் சிறுபான்மையினர் ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்யும் மத்திய பாஜக .அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என அச்சிடப்பட்டிருந்தது. சிறுபான்மையினர் இரண்டு சுழி( ன்)க்கு பதிலாக சிறுபாண்மையினர் என்றும் மன்னிக்க இரண்டு சுழி (ன்)க்கு பதிலாக மண்ணிக்க என எழுத்துப் பிழையோடு பதிவு செய்யப்பட்டு இருந்தது.திமுக தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கட்சி . ஆனால் கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஒருவர் கூட இந்த எழுத்துப் பிழையை பார்க்கவில்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்காக திமுகவில் கலை இலக்கிய அணி என தனி ஒரு அணி உள்ளது. இலக்கிய அணி இருந்தும் இலக்கியத் தவறை கண்டு பிடிக்கவில்லை.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.