ETV Bharat / state

மரணத்தருவாயில் குருவுக்கு உதவாத அன்புமணி

தர்மபுரி: மரணத் தருவாயில் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குருவுக்கு உதவாத அன்புமணி ராமதாஸ் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார் என தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

author img

By

Published : Apr 1, 2019, 5:30 PM IST

'மரணத்தருவாயில் குருவுக்கு உதவாத அன்புமனி'

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். செந்தில்குமார் இன்று இண்டூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் தொகுதி மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,வன்னியர் சங்கத் தலைவருமான, குரு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்என அவரது குடும்பத்தார்கள் பாமக கட்சி தலைமையிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் பாமகவினர் அவருக்கு விசா இல்லாத காரணத்தால், வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல இயலவில்லை என தெரிவித்தனர். ஆனால் குருவின் குடும்பத்தினர் அவர் பலமுறை மலேசியாவிற்கு சென்று வந்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்தனர்.

இவ்வாறு பாமகவிற்கு உழைத்த குரு குடும்பத்திற்கே எதுவும் செய்யாத அன்புமணி ராமதாஸ், உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்" எனக் கூடியிருந்த மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். செந்தில்குமார் இன்று இண்டூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் தொகுதி மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,வன்னியர் சங்கத் தலைவருமான, குரு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்என அவரது குடும்பத்தார்கள் பாமக கட்சி தலைமையிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் பாமகவினர் அவருக்கு விசா இல்லாத காரணத்தால், வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல இயலவில்லை என தெரிவித்தனர். ஆனால் குருவின் குடும்பத்தினர் அவர் பலமுறை மலேசியாவிற்கு சென்று வந்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்தனர்.

இவ்வாறு பாமகவிற்கு உழைத்த குரு குடும்பத்திற்கே எதுவும் செய்யாத அன்புமணி ராமதாஸ், உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்" எனக் கூடியிருந்த மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

Intro:TN_DPI_01_01_DMK CANDIDATECAMPING_VIS_7204444


Body:TN_DPI_01_01_DMK CANDIDATECAMPING_VIS_7204444


Conclusion:பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழு குடும்பத்திற்கு அன்புமணி குடும்பம் எதுவும் செய்யவில்லை பொதுமக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் தர்மபுரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செந்தில்குமார் தேர்தல் பிரச்சாரம்...தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் செந்தில்குமார் இன்று இண்டூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய செந்தில்குமார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் தொகுதி மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை என்றும் தர்மபுரி தொகுதி மக்களுக்கு யாருக்காவது அவர் வேலை வாங்கிக் கொடுத்தாரா என்று கேள்வி எழுப்பிய செந்தில்குமார் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வன்னியர் சங்க தலைவருமான மறைந்த ஜெ குரு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் அவரை வெளி நாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என அவரது குடும்பத்தார்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் பாமகவினர் அவருக்கு விசா இல்லை என்றும் அதனால்தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லவில்லை என்றும் தெரிவிக்கின்றனர் குருவின் குடும்பத்தார் அவர் மலேசியாவிற்கு சென்று உள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர் பாமகவிற்கு உழைத்த குரு குடும்பத்திற்கு எதுவும் செய்யாத பாமகவினர் அன்புமணி ராமதாஸ் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.