ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகளுடன் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள்

author img

By

Published : Apr 16, 2021, 7:47 PM IST

தர்மபுரி: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றன.

practical exam in dharmapuri
practical exam in dharmapuri

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று (ஏப்ரல் 16) தொடங்கியுள்ளது. அந்தவகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (ஏப்.16) காலை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன.

முன்னதாக செய்முறைத் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து கிருமிநாசினி வழங்கப்பட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வுகளை எழுதினர். இந்தச் செய்முறைத் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வினை மாணவர்கள் எழுதிவருகின்றனர்.

மேலும் 25 மதிப்பெண்கள் பாடம் தொடர்பான சுயமுறைப் பதிவேடுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா அதிகமானால் பகுதி நேர ஊரடங்கு - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று (ஏப்ரல் 16) தொடங்கியுள்ளது. அந்தவகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (ஏப்.16) காலை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன.

முன்னதாக செய்முறைத் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து கிருமிநாசினி வழங்கப்பட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வுகளை எழுதினர். இந்தச் செய்முறைத் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வினை மாணவர்கள் எழுதிவருகின்றனர்.

மேலும் 25 மதிப்பெண்கள் பாடம் தொடர்பான சுயமுறைப் பதிவேடுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா அதிகமானால் பகுதி நேர ஊரடங்கு - தமிழிசை சௌந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.