ETV Bharat / state

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை! - பெற்பயிர்கள் சேதம்

தருமபுரி: அரூர் அருகே தொடர்ந்து இரண்டு நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

சேதமடைந்த நெற்பயிர்கள்
சேதமடைந்த நெற்பயிர்கள்
author img

By

Published : Jan 9, 2021, 12:21 PM IST

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றன. அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட மாவட்ட எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது . மழை காரணமாக அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வள்ளி மதுரை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வரட்டாறு வழியாக சென்று அருகேவுள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலமாக செல்கின்றன. ஊராட்சி நிர்வாகம் இந்த கால்வாய்கள், ஏரி, குளம், குட்டைகளை குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததால் கால்வாய் வழியாகச் செல்லும் நீர் அருகேயுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று வயல்கள் சேதமாகியுள்ளன.

சேதமடைந்த நெற்பயிர்கள்

இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராகயுள்ள இந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்னர்.

இதையும் படிங்க: கனமழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றன. அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட மாவட்ட எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது . மழை காரணமாக அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வள்ளி மதுரை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வரட்டாறு வழியாக சென்று அருகேவுள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலமாக செல்கின்றன. ஊராட்சி நிர்வாகம் இந்த கால்வாய்கள், ஏரி, குளம், குட்டைகளை குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததால் கால்வாய் வழியாகச் செல்லும் நீர் அருகேயுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று வயல்கள் சேதமாகியுள்ளன.

சேதமடைந்த நெற்பயிர்கள்

இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராகயுள்ள இந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்னர்.

இதையும் படிங்க: கனமழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.