ETV Bharat / state

மதுப்பிரியர்களுக்கு டாஸ்மாக்கில் பிரச்சினையா - இனி இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 5:16 PM IST

Updated : Aug 22, 2023, 5:31 PM IST

Tasmac Complaint Toll free number: தருமபுரியில் டாஸ்மார்க் மதுபான கடையில் விலை ரீதியான பிரச்சனைகள் தொடர்பான புகார்களை அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் மதுபான கடைகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளில் ஐந்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மதுபானத்தின் அளவிற்கு ஏற்ற வகையில் கூடுதலாக விலை வைத்து விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். மதுபானத்தின் விலையை விட கூடுதலாக கேட்கும் விற்பனையாளர்களுக்கும் மது பிரியர்களுக்கும் நாள்தோறும் வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம் ஆகிவிட்டது

வாடிக்கையான நிலையில் தற்போது டாஸ்மார்க் மதுபான கடைகளின் முன் பகுதியில் புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணம் இல்லா தொலைபேசி எண் என தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் 1800 425 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு பலகை டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு முன்பு தொங்க விடப்பட்டுள்ளது.

மதுப்பிரியர்கள் தங்கள் பிரச்சனைகளையும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை தொடர்பான புகார்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், கூடுதல் விலையால் மதுப்பிரியர்களுக்கும், அரசு டாஸ்மாக் கடை ஊழியருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நிலவியது.

இதையும் படிங்க: சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கார்த்திக் தற்கொலை

இந்நிலையில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கபபட்ட விவகாரத்தில் தொடர்ந்து பல புகார்கள் வந்ததால், இனி கூடுதலாக பாட்டிலுக்கு பணம் வசூலிக்கப்பட்டால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் டாஸ்மாக்கில் விற்பனை தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்கு தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) தருமபுரியில் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், உடணனடியாக நிர்வாகத்திற்கு பிரச்சினையை தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த பலகை மதுபான கடைகளுக்கு முன்பு தொங்க விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை போதை பொருள் கும்பல் தலைவன் கைது - 10 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பின்னணி!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் மதுபான கடைகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளில் ஐந்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மதுபானத்தின் அளவிற்கு ஏற்ற வகையில் கூடுதலாக விலை வைத்து விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். மதுபானத்தின் விலையை விட கூடுதலாக கேட்கும் விற்பனையாளர்களுக்கும் மது பிரியர்களுக்கும் நாள்தோறும் வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம் ஆகிவிட்டது

வாடிக்கையான நிலையில் தற்போது டாஸ்மார்க் மதுபான கடைகளின் முன் பகுதியில் புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணம் இல்லா தொலைபேசி எண் என தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் 1800 425 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு பலகை டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு முன்பு தொங்க விடப்பட்டுள்ளது.

மதுப்பிரியர்கள் தங்கள் பிரச்சனைகளையும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை தொடர்பான புகார்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், கூடுதல் விலையால் மதுப்பிரியர்களுக்கும், அரசு டாஸ்மாக் கடை ஊழியருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நிலவியது.

இதையும் படிங்க: சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கார்த்திக் தற்கொலை

இந்நிலையில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கபபட்ட விவகாரத்தில் தொடர்ந்து பல புகார்கள் வந்ததால், இனி கூடுதலாக பாட்டிலுக்கு பணம் வசூலிக்கப்பட்டால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் டாஸ்மாக்கில் விற்பனை தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்கு தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) தருமபுரியில் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், உடணனடியாக நிர்வாகத்திற்கு பிரச்சினையை தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த பலகை மதுபான கடைகளுக்கு முன்பு தொங்க விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை போதை பொருள் கும்பல் தலைவன் கைது - 10 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பின்னணி!

Last Updated : Aug 22, 2023, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.