ETV Bharat / state

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்வு!

author img

By

Published : Sep 25, 2019, 1:35 PM IST

தருமபுரி: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

hoganakkal water hike

கர்நாடக மாநிலம் மாண்டியா தும்கூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இன்று 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

hoganakkal water hike
ஆர்ப்பரித்து ஓடும் நீர்

கர்நாடகப் பகுதியிலிருந்து மழைநீர் பிலிகுண்டுலு பகுதிக்கு நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து, இன்று காலை எட்டு மணி நிலவரப்படி 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

தற்போது ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய மழைநீர் செம்மண் கலந்து தண்ணீர் செந்நிறமாக வழிந்தோடிவருகிறது. ஒகேனக்கல்லில் 50ஆவது நாளாக குளிக்கவும் 21ஆவது நாளாக பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

மழைநீர் செம்மண் கலந்து செந்நிறமாக ஓடியபோது

இதையும் படிங்க: தடையை மீறி ஒகேனக்கலில் படகில் சென்ற குடும்பத்தினர் : பரிசல் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் மாண்டியா தும்கூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இன்று 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

hoganakkal water hike
ஆர்ப்பரித்து ஓடும் நீர்

கர்நாடகப் பகுதியிலிருந்து மழைநீர் பிலிகுண்டுலு பகுதிக்கு நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து, இன்று காலை எட்டு மணி நிலவரப்படி 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

தற்போது ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய மழைநீர் செம்மண் கலந்து தண்ணீர் செந்நிறமாக வழிந்தோடிவருகிறது. ஒகேனக்கல்லில் 50ஆவது நாளாக குளிக்கவும் 21ஆவது நாளாக பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

மழைநீர் செம்மண் கலந்து செந்நிறமாக ஓடியபோது

இதையும் படிங்க: தடையை மீறி ஒகேனக்கலில் படகில் சென்ற குடும்பத்தினர் : பரிசல் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு!

Intro:tn_dpi_01_hoganakkal_water_hike_vis_7204444


Body:tn_dpi_01_hoganakkal_water_hike_vis_7204444


Conclusion:

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்வு. கர்நாடக மாநிலம் மாண்டியா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.மேலும் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வரத்து இன்று 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது .நேற்று மாலை கர்நாடகப் பகுதியிலிருந்து மழைநீர் பிலிகுண்டுலு பகுதிக்கு 32 ஆயிரம் கன அடியாக வந்தது.நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஒகேனக்கல் வரக்கூடிய நீர் மழை நீர் என்பதால் செம்மண் கலந்த தண்ணீர் செந்நிறமாக வழிந்தோடி வருகிறது.ஒகேனக்கல்லில் 50 ஆவது நாளாக குளிக்கவும் 21 வது நாளாக பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறித்து நேற்று கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.