ETV Bharat / state

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்தாகுமா? - உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்!

author img

By

Published : Jun 12, 2020, 5:16 PM IST

தருமபுரி: கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து குறித்து இன்னும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் முடிவெடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

kp anbazhagan
kp anbazhagan

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. கல்லூரிகள் தற்போது கரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அரசு பொறியியல் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய அரசு கல்லூரிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த கரோனா பாதிப்பாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

கல்லூரி செமஸ்டர் தற்போதைக்கு இல்லை

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மருத்துவமனைகளாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்வது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும். கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்வதில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திருமணம் நடத்த அனுமதி பெறவேண்டும் - ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. கல்லூரிகள் தற்போது கரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அரசு பொறியியல் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய அரசு கல்லூரிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த கரோனா பாதிப்பாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

கல்லூரி செமஸ்டர் தற்போதைக்கு இல்லை

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மருத்துவமனைகளாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்வது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும். கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்வதில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திருமணம் நடத்த அனுமதி பெறவேண்டும் - ஆட்சியர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.