ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் பணம், 5 பவுன் நகைகள் கொள்ளை!

author img

By

Published : Aug 7, 2019, 3:05 PM IST

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம், 5 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Dharmapuri

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கதிரேசன் (38). இவர் மெணசி கடைவீதியில் எலக்ட்ரிக்கல் கடை, சிமெண்ட் கடை நடத்திவருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை மூடிவிட்டு வசூலான பணத்தை எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள பீரோவில் வைத்தார். பின்னர், இரவு 10 மணிக்கு மேல் விவசாய தோட்டத்தில் கட்டட வேலை நடைபெற்று வரும் புது வீட்டை பார்க்க தனது தாயாருடன் சென்றுவிட்டார். பிறகு இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 2 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் கோபாலபுரம் சுகர் மில்லில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றுவிட்டு இன்று காலை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, பொருட்கள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வீட்டில் கொள்ளையர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பத், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஒரேநாள் இரவில் அடுத்தடுத்த கிராமங்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கதிரேசன் (38). இவர் மெணசி கடைவீதியில் எலக்ட்ரிக்கல் கடை, சிமெண்ட் கடை நடத்திவருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை மூடிவிட்டு வசூலான பணத்தை எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள பீரோவில் வைத்தார். பின்னர், இரவு 10 மணிக்கு மேல் விவசாய தோட்டத்தில் கட்டட வேலை நடைபெற்று வரும் புது வீட்டை பார்க்க தனது தாயாருடன் சென்றுவிட்டார். பிறகு இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 2 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் கோபாலபுரம் சுகர் மில்லில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றுவிட்டு இன்று காலை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, பொருட்கள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வீட்டில் கொள்ளையர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பத், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஒரேநாள் இரவில் அடுத்தடுத்த கிராமங்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:tn_dpi_01_2lak_theft_img_7204444Body:tn_dpi_01_2lak_theft_img_7204444Conclusion:பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 இலட்சம்,5 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 இலட்சம்,5 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசைகாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி இவரது மகன் கதிரேசன் வயது 38 .இவர் மெணசி கடைவீதியில் எலக்ட்ரிக்கல் கடை மற்றும் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு தனது வீட்டிற்கு வசூலான பணத்தை எடுத்துச் சென்றார் . .வீட்டில் பீரோவில் ரூபாய் இரண்டு லட்சத்தை வைத்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் தனது விவசாய தோட்டத்தில் கட்டி வரும் புது வீட்டிற்கு பார்த்து வர வீட்டை பூட்டிவிட்டு தனது தாயாருடன் சென்றுவிட்டார். இரவு முழுவதும் அங்கே தங்கிவிட்டார் பிறகு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் .பிறகுஉள்ளே சென்று பார்த்த பிறகு பீரோக்கள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் தங்க நகைகள் 5 பவுன் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை யடுத்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மற்றும் மோப்ப நாய் ,கைரேகை நிபுணர்கள் மெணசிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மழைக்காலம் பட்டியைச் சேர்ந்தவர் சம்பத் .இவர் கோபாலபுரம் சுகர் மில்லில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார் . இவர் குடும்பத்தோடு அத்திவரதரை கும்பிட காஞ்சிபுரம் சென்று விட்டு இன்று காலை வந்தபோதுமர்ம நபர்கள் நேற்று இரவு இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே இருந்த பீரோ மற்றும் பொருட்கள்எல்லாம் உடைகப்பட்டிருந்தது. ஆனால் வீட்டில் மர்ம நபர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சம்பத் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த கிராமங்களில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதால்அ ப்பகுதி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.