ETV Bharat / state

நிலத்தை மீட்டுத்தரக்கோரி எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - SP office

தருமபுரி: விவசாய நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த காளப்பன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

farmer-family-try-to-fire
author img

By

Published : Apr 23, 2019, 9:16 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த காளப்பன் என்பவருக்குச் சொந்தமாக 0.75 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதியன்று திருமல்வாடி பகுதியைச் சேர்ந்த ராமன், பொன்னுசாமி, கணேசன், சிவன், சக்திவேல் உள்பட 14 பேர் இந்த விவசாய நிலம் நத்தம் புறம்போக்கு நிலம் எனவும், நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றும், உடனடியாக நிலத்திலிருந்து காலி செய்யாவிட்டால், தாங்கள் காலி செய்து விடுவோம் என காளப்பனை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், இந்த நிலத்தில் இருந்த மரங்கள், தக்காளிச் செடிகள், வாழை மரங்கள், தீவனப்பயிர்கள், கிணறு, மோட்டர் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கவந்த காளப்பன் தனது குடும்பத்துடன் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். இதனைக் கண்ட அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு தண்ணீா் ஊற்றி காப்பாற்றினர்.

இதையடுத்து, காளப்பன் தங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தார்.

எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த காளப்பன் என்பவருக்குச் சொந்தமாக 0.75 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதியன்று திருமல்வாடி பகுதியைச் சேர்ந்த ராமன், பொன்னுசாமி, கணேசன், சிவன், சக்திவேல் உள்பட 14 பேர் இந்த விவசாய நிலம் நத்தம் புறம்போக்கு நிலம் எனவும், நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றும், உடனடியாக நிலத்திலிருந்து காலி செய்யாவிட்டால், தாங்கள் காலி செய்து விடுவோம் என காளப்பனை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், இந்த நிலத்தில் இருந்த மரங்கள், தக்காளிச் செடிகள், வாழை மரங்கள், தீவனப்பயிர்கள், கிணறு, மோட்டர் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கவந்த காளப்பன் தனது குடும்பத்துடன் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். இதனைக் கண்ட அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு தண்ணீா் ஊற்றி காப்பாற்றினர்.

இதையடுத்து, காளப்பன் தங்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தார்.

எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி



--

விவசாய நிலத்தை மீட்டுத்தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி கிராமத்தில்  காளப்பன் என்பவருக்குசொந்தமாக  0.75 செண்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தங்கள் முன்னோர் காலத்திலிருந்து உபயோகித்து வருவதாகவும் அதற்கு ஆண்டுதோறும் வரி செலுத்தி வருவதாகவும், தற்போது இந்த விவசாய நிலத்தில் இருந்த மரங்கள், தக்காளி செடிகள், வாழை மரங்கள், தீவனப்பயிர்கள், கிணறு, விவசாய மோட்டார் பம்ப்செட் உள்ளிட்டவைகளை திருமல்வாடி பகுதியைச் சேர்ந்த ராமன், பொன்னுசாமி, கணேசன், சிவன்,  சக்திவேல் உள்பட 14 பேர் கடந்த 20-ம் தேதியன்று இந்த விவசாய நிலம் நத்தம் புறம்போக்கு நிலம் எனவும் நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது எனவும் தெரிவித்து  உடனடியாக  நிலத்திலிருந்து காளப்பன் குடும்பத்தாரை காலி செய்ய வேண்டும்  இல்லை என்றால் நாங்கள் காலி செய்து விடுவோம் என மிரட்டி சென்றுள்ளனர். இதனால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கவந்த காளப்பன் தனது குடும்பத்துடன் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தனர் அங்கிருந்த போலிசார் மீட்டு அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா்.காளப்பன் குடும்பத்தார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்டகாவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தார். உயிருக்கு பாதுகாப்பு கோரிமாவட்டகாவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.














B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.