ETV Bharat / state

”தர்மபுரியை தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை”- தர்மபுரி எம்பி

author img

By

Published : Jan 13, 2022, 12:15 PM IST

தர்மபுரி மாவட்டத்தை தண்ணீர் பற்றாக்குறையற்ற மாவட்டமாக மாற்றும் நடவடிக்கை அனைத்து மேற்கொள்ளப்படும் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

dharmapuri mp senthilkumar press meet
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார்

தர்மபுரி: கடத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 58 லட்சம் மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணியை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட புது காலனி தெருவுக்கு நீண்ட நாள்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது.

சாலை அமைக்கும் பணி

இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததன் அடிப்படையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021 - 2022 கீழ் ரூ 58 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் கால்வாய் வசதி, சாலை வசதி கோரி விண்ணப்பம் அளித்ததில் சாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நியாயவிலை கடைகளில் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் 21 பொருள்கள் தரமாக உள்ளது. கடத்தூர் பகுதியில் ஆய்வு செய்தோம். சிலர் பொருள்களை வெளியில் இருந்து வாங்கி வந்து தரமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

தரமான பொருள்கள்

தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய பொருள்கள் அனைத்தும் தரமான பொருள்களாக உள்ளது. ஆறு அடி நீளம் உள்ள கரும்பு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டம் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரயில் திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென்மேற்கு ரயில்வேயிடமிருந்து கடிதம் வந்துள்ளது.

நில அளவைப் பணி பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். நில அளவைப் பணி முடிந்த பிறகு தர்மபுரி நகரப்பகுதியில் வரும் எட்டு கிலோமீட்டர் புதிய பாதைக்கு கையகப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது.

இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஏற்கனவே சென்ற நிதி ஆண்டில் மொரப்பூர் தர்மபுரியில், திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலர்களிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தி, தற்போது நில அளவைப் பணி மற்ற பணிகளுக்காக இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி. இந்த திட்டத்தின் கீழ் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தர்மபுரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இல்லை.

நீர் திட்டங்களில் தனி கவனம்

தர்மபுரி நகராட்சி பகுதிக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில் அரசியல் காரணத்திற்காக நிறுத்தப்பட்டதால் தர்மபுரி நகராட்சி பணம் கட்டி பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், மிக முக்கிய கோரிக்கையான நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தில் இருந்து தர்மபுரி நகராட்சிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர் திட்டங்களை தனி கவனம் செலுத்தி தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நலத்திட்டங்களாக வரும் பொதுமக்களின் மனுக்கள் - அமைச்சர் முத்துசாமி

தர்மபுரி: கடத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 58 லட்சம் மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணியை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட புது காலனி தெருவுக்கு நீண்ட நாள்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது.

சாலை அமைக்கும் பணி

இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததன் அடிப்படையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021 - 2022 கீழ் ரூ 58 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் கால்வாய் வசதி, சாலை வசதி கோரி விண்ணப்பம் அளித்ததில் சாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நியாயவிலை கடைகளில் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் 21 பொருள்கள் தரமாக உள்ளது. கடத்தூர் பகுதியில் ஆய்வு செய்தோம். சிலர் பொருள்களை வெளியில் இருந்து வாங்கி வந்து தரமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

தரமான பொருள்கள்

தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய பொருள்கள் அனைத்தும் தரமான பொருள்களாக உள்ளது. ஆறு அடி நீளம் உள்ள கரும்பு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டம் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரயில் திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென்மேற்கு ரயில்வேயிடமிருந்து கடிதம் வந்துள்ளது.

நில அளவைப் பணி பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். நில அளவைப் பணி முடிந்த பிறகு தர்மபுரி நகரப்பகுதியில் வரும் எட்டு கிலோமீட்டர் புதிய பாதைக்கு கையகப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது.

இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஏற்கனவே சென்ற நிதி ஆண்டில் மொரப்பூர் தர்மபுரியில், திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலர்களிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தி, தற்போது நில அளவைப் பணி மற்ற பணிகளுக்காக இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி. இந்த திட்டத்தின் கீழ் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தர்மபுரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இல்லை.

நீர் திட்டங்களில் தனி கவனம்

தர்மபுரி நகராட்சி பகுதிக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்த பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில் அரசியல் காரணத்திற்காக நிறுத்தப்பட்டதால் தர்மபுரி நகராட்சி பணம் கட்டி பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், மிக முக்கிய கோரிக்கையான நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தில் இருந்து தர்மபுரி நகராட்சிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர் திட்டங்களை தனி கவனம் செலுத்தி தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நலத்திட்டங்களாக வரும் பொதுமக்களின் மனுக்கள் - அமைச்சர் முத்துசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.