தருமபுரி: நிவர் புயலின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், நாளை (நவ. 29) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தருமபுரி நகர பேருந்து நிலைய மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
![dharmapuri flower market update, பூ விலை நிலவரம், மலர் விலை நிலவரம், கார்த்திகை தினம், flower market price update, தர்மபுரி மலர் சந்தை, மலர் சந்தை நிலவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-deepam-festival-flower-sale-vis-7204444_28112020102332_2811f_1606539212_1079.jpg)
நிவர் புயல் காரணமாக கடந்த மூன்று தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
இதன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நாளை (நவ. 29) கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
![dharmapuri flower market update, பூ விலை நிலவரம், மலர் விலை நிலவரம், கார்த்திகை தினம், flower market price update, தர்மபுரி மலர் சந்தை, மலர் சந்தை நிலவரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-deepam-festival-flower-sale-vis-7204444_28112020102332_2811f_1606539212_476.jpg)
இதனால், ஏராளமானோர் பூக்கள் வாங்க வந்திருந்தனர். ஆனால் பூக்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சந்தையில் விற்பனையான பூக்களின் விலை கீழ்வருமாறு.
சாமந்தி பூ | ரூ.120 / கிலோ |
சம்பங்கிப்பூ | ரூ.120 / கிலோ |
பட்டன் ரோஸ் | ரூ.100 / கிலோ |
அரளி பூ | ரூ.240 / கிலோ |
குண்டுமல்லி | ரூ.800 / கிலோ |
கனகாம்பரம் | ரூ.800 / கிலோ |
கோழிக்கொண்டை | ரூ.40 / கிலோ |