தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று (அக்.22) மாலை 5:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் தனித்தனியாக சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத 42 ஆயிரத்து 250 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.