ETV Bharat / state

சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த திடீர் ஆய்வு: கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பறிமுதல்! - லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள்

தருமபுரி: பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 42 ஆயிரத்து 250 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்பதிவாளர் அலுவலகம்
Anti corruption officers raid on registered office
author img

By

Published : Oct 22, 2020, 11:57 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று (அக்.22) மாலை 5:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் தனித்தனியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் கணக்கில் வராத 42 ஆயிரத்து 250 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று (அக்.22) மாலை 5:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் தனித்தனியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் கணக்கில் வராத 42 ஆயிரத்து 250 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.