ETV Bharat / state

தமிழ்நாடு வந்த காவிரித்தாய்! - Cauvery water opening from Karnataka dams

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

காவிரியின் வருகையால் மேனி செழிக்கும் தமிழ்நாடு!
காவிரியின் வருகையால் மேனி செழிக்கும் தமிழ்நாடு!
author img

By

Published : Aug 6, 2020, 2:05 PM IST

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கபினி அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீரும்; கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 5) காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து 3,500 கனஅடியாக இருந்தது. நண்பகல் நீர்வரத்து ஆயிரம் கனஅடி உயர்ந்து 4,500 கன அடியாக மாறியது.

வற்றாத காவிரி வந்தது தமிழ்நாடு!
வற்றாத காவிரி வந்தது தமிழ்நாடு!

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

காலை நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை: காவிரி நீர் பாசனத்துக்கு கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கபினி அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீரும்; கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 5) காலை ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து 3,500 கனஅடியாக இருந்தது. நண்பகல் நீர்வரத்து ஆயிரம் கனஅடி உயர்ந்து 4,500 கன அடியாக மாறியது.

வற்றாத காவிரி வந்தது தமிழ்நாடு!
வற்றாத காவிரி வந்தது தமிழ்நாடு!

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

காலை நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை: காவிரி நீர் பாசனத்துக்கு கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.