ETV Bharat / state

கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! - Car accident

தருமபுரி: மல்லாபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

car-accident
author img

By

Published : Aug 4, 2019, 2:30 PM IST

Updated : Aug 4, 2019, 2:56 PM IST

தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (42), மனைவி லதா (41), மகன் நிதி அபிநவ் (13), மகள் அபிநய கீர்த்தி (10), வேத ரித்திகா (6) ஆகியோர் தருமபுரியிலிருந்து பொன்னாகரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தக் காரினை திருமூர்த்தி ஓட்டிச்சென்றார்.

அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து தருமபுரி நோக்கி விவேக் (30), ஆடிட்டர்கள் ரத்தின வேல் (40), சரவணன் (40), பிரகாஷ் (37), முருகன் ஆகியோர் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டி வந்துள்ளார்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்

இரண்டு கார்களும் மல்லாபுரம் பகுதியில் வந்தபோது, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த திருமூர்த்தி, நிதி அபிநவ் உள்ளிட்ட எட்டு பேரையும் மீட்டு உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி திருமூர்த்தி, அவரது மகன் அபிநவ் இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அபிநய கீர்த்தி மேல்சிகிச்சைக்காகா சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இண்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநர் முருகனை தேடிவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (42), மனைவி லதா (41), மகன் நிதி அபிநவ் (13), மகள் அபிநய கீர்த்தி (10), வேத ரித்திகா (6) ஆகியோர் தருமபுரியிலிருந்து பொன்னாகரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தக் காரினை திருமூர்த்தி ஓட்டிச்சென்றார்.

அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து தருமபுரி நோக்கி விவேக் (30), ஆடிட்டர்கள் ரத்தின வேல் (40), சரவணன் (40), பிரகாஷ் (37), முருகன் ஆகியோர் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டி வந்துள்ளார்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்

இரண்டு கார்களும் மல்லாபுரம் பகுதியில் வந்தபோது, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த திருமூர்த்தி, நிதி அபிநவ் உள்ளிட்ட எட்டு பேரையும் மீட்டு உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி திருமூர்த்தி, அவரது மகன் அபிநவ் இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அபிநய கீர்த்தி மேல்சிகிச்சைக்காகா சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இண்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநர் முருகனை தேடிவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:தருமபுரி அருகே 2கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன்.மகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு . தருமபுரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பென்னாகரத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது 42. இவர் பென்னாகரத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி லதா வயது 41. பென்னாகரம் அடுத்த எட்டிக்குட்டை தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நிதி அபிநவ் வயது 13 .இவரது மகள் அபிநயா கீர்த்தி வயது 10. வேத ரித்திகா வயது 6. இவர்கள் 6 பேரும்நேற்று ஆடி 18 விழாவை முன்னிட்டு லதாவின் தாய்வீடான தருமபுரி அதியமான் கோட்டை அடுத்த வடக்குத் தெரு கொட்டா ஊருக்கு சென்றுவிட்டு இரவு காரில் பென்னாகரம் திரும்பிகொண்டிருந்தனர். காரை திருமூர்த்தி ஓட்டிச்சென்றார். கார் இன்டூர் அடுத்த சோம்பட்டி அருகே உள்ள மல்லாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த து.அப்போது ஒகேனக்கல்லில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் விவேக் 30.பண்டஹள்ளி சின்னசெட்டியார் மகன் ஆடிட்டர் ரத்தின வேல் 40.புலிகரையை சேர்ந்த அல்லி முத்து மகன் ஆடிட்டர் சரவணன் 40.பூகானஹள்ளி பிரகாஷ் 37.புலிகரையை சேர்ந்த முருகன் ஆகியோர் ஒரு காரில்தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.காரை முருகன் ஓட்டி வந்துள்ளார்.அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த திருமூர்த்தி கார் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் திருமூர்த்தி,நிதி அபிநவ் , உள்ளிட்ட 8 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி அவரது மகன் நிதி அபிநவ் இருவரும் உயிழந்தனர்.மற்ற ஆறு பேரும் சிகிச்சை பெற்று வந்தனர் .பலத்த அடிபட்ட அபிநய கீர்த்தி என்ற சிறுமி சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார் விபத்தில் தாய் தந்தை இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து. இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவர் முருகனை தேடி வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகன்.மகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:தருமபுரி அருகே 2கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன்.மகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்புConclusion:தருமபுரி அருகே 2கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன்.மகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு . தருமபுரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பென்னாகரத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி வயது 42. இவர் பென்னாகரத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி லதா வயது 41. பென்னாகரம் அடுத்த எட்டிக்குட்டை தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நிதி அபிநவ் வயது 13 .இவரது மகள் அபிநயா கீர்த்தி வயது 10. வேத ரித்திகா வயது 6. இவர்கள் 6 பேரும்நேற்று ஆடி 18 விழாவை முன்னிட்டு லதாவின் தாய்வீடான தருமபுரி அதியமான் கோட்டை அடுத்த வடக்குத் தெரு கொட்டா ஊருக்கு சென்றுவிட்டு இரவு காரில் பென்னாகரம் திரும்பிகொண்டிருந்தனர். காரை திருமூர்த்தி ஓட்டிச்சென்றார். கார் இன்டூர் அடுத்த சோம்பட்டி அருகே உள்ள மல்லாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த து.அப்போது ஒகேனக்கல்லில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் விவேக் 30.பண்டஹள்ளி சின்னசெட்டியார் மகன் ஆடிட்டர் ரத்தின வேல் 40.புலிகரையை சேர்ந்த அல்லி முத்து மகன் ஆடிட்டர் சரவணன் 40.பூகானஹள்ளி பிரகாஷ் 37.புலிகரையை சேர்ந்த முருகன் ஆகியோர் ஒரு காரில்தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.காரை முருகன் ஓட்டி வந்துள்ளார்.அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த திருமூர்த்தி கார் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் திருமூர்த்தி,நிதி அபிநவ் , உள்ளிட்ட 8 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி அவரது மகன் நிதி அபிநவ் இருவரும் உயிழந்தனர்.மற்ற ஆறு பேரும் சிகிச்சை பெற்று வந்தனர் .பலத்த அடிபட்ட அபிநய கீர்த்தி என்ற சிறுமி சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார் விபத்தில் தாய் தந்தை இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து. இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவர் முருகனை தேடி வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மகன்.மகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Aug 4, 2019, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.