ETV Bharat / state

ஆயுதப் படையில் தண்ணீர் பஞ்சம்: காவலர்களின் புது முயற்சி

author img

By

Published : Jun 6, 2019, 12:03 PM IST

தருமபுரி: ஆயுதப் படை வளாகத்தில் நிலத்தடி  நீர்மட்டத்தை  அதிகரிக்கும் வகையில் காவல் துறையினர் மூன்று குளங்களை உருவாக்கி மழைநீரை சேகரித்துவருகின்றனர்.

File pic

தருமபுரி மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான ஆயுதப்படை வளாகம் வெண்ணாம்பட்டி பகுதியில் 36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தில் காவலர்களுக்கான 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வளாகத்தில் காவலா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது.

ஆயுதப்படை பயன்பாட்டுக்கென ஆறு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் நான்கு கிணறுகள் கோடை வறட்சி காரணமாக வறண்டுவிட்டன. இதனையடுத்து ஆயுதப்படையில் தண்ணீர் தட்டுபாடு நிலவியது.

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் காவலர்கள் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்க திட்டம் ஒன்றை வகுத்தனர். அதன்படி காவலர்கள் தங்களது பணி நேரம் போக மீதி நேரங்களில் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐந்து நாட்களில் மூன்று குளத்தை இவர்கள் வெட்டியுள்ளனர். இதற்கு தேவைப்பட்ட பணத்தை காவல் துறையினர் பங்கிட்டுக் கொண்டனர்.

இவர்கள் குளங்கள் தயார்செய்த சில தினங்களிலேயே தருமபுரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் மழைநீா் குளங்களில் தேங்கத் தொடங்கியது. இந்த மழைநீர் சேமிப்பால் ஆழ்துளை கிணற்றில் நீர் ஊறத் தொடங்கிவிட்டது. இதனால் ஆயுதப்படை வளாகத்தில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.

மழை நீரை சேகரிக்கும் காவலர்கள்

இது குறித்து மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் கூறியதாவது, ஆயுதப்படை வளாகத்தில் காவலா் பயிற்சிப்பள்ளி நடைபெற்றுவருகிறது. காவலா்களுக்கு தேவையான தண்ணீரை வெளியில் விலைகொடுத்த வாங்கிவந்தோம்.

வளாகத்தில் உள்ள மரங்கள் காய்ந்து கிடந்ததை பார்த்து மழைநீரை சேமிக்க குளம் அமைக்க முடிவு செய்தோம். பின் ஆயுதப்படை வளாகத்தில் இடத்தை ஆய்வுசெய்து அதில் குளங்களை வெட்டினோம். தற்போது பெய்த மழையில் வறண்டு கிடந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் வர தொடங்கிவிட்டது. அதனை பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது.

இதற்கு உதவிபுரிந்த காவலா்களுக்கும் ஆலோசனை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் இயற்கைக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான ஆயுதப்படை வளாகம் வெண்ணாம்பட்டி பகுதியில் 36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தில் காவலர்களுக்கான 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வளாகத்தில் காவலா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது.

ஆயுதப்படை பயன்பாட்டுக்கென ஆறு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் நான்கு கிணறுகள் கோடை வறட்சி காரணமாக வறண்டுவிட்டன. இதனையடுத்து ஆயுதப்படையில் தண்ணீர் தட்டுபாடு நிலவியது.

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் காவலர்கள் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்க திட்டம் ஒன்றை வகுத்தனர். அதன்படி காவலர்கள் தங்களது பணி நேரம் போக மீதி நேரங்களில் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐந்து நாட்களில் மூன்று குளத்தை இவர்கள் வெட்டியுள்ளனர். இதற்கு தேவைப்பட்ட பணத்தை காவல் துறையினர் பங்கிட்டுக் கொண்டனர்.

இவர்கள் குளங்கள் தயார்செய்த சில தினங்களிலேயே தருமபுரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் மழைநீா் குளங்களில் தேங்கத் தொடங்கியது. இந்த மழைநீர் சேமிப்பால் ஆழ்துளை கிணற்றில் நீர் ஊறத் தொடங்கிவிட்டது. இதனால் ஆயுதப்படை வளாகத்தில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.

மழை நீரை சேகரிக்கும் காவலர்கள்

இது குறித்து மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் கூறியதாவது, ஆயுதப்படை வளாகத்தில் காவலா் பயிற்சிப்பள்ளி நடைபெற்றுவருகிறது. காவலா்களுக்கு தேவையான தண்ணீரை வெளியில் விலைகொடுத்த வாங்கிவந்தோம்.

வளாகத்தில் உள்ள மரங்கள் காய்ந்து கிடந்ததை பார்த்து மழைநீரை சேமிக்க குளம் அமைக்க முடிவு செய்தோம். பின் ஆயுதப்படை வளாகத்தில் இடத்தை ஆய்வுசெய்து அதில் குளங்களை வெட்டினோம். தற்போது பெய்த மழையில் வறண்டு கிடந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் வர தொடங்கிவிட்டது. அதனை பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது.

இதற்கு உதவிபுரிந்த காவலா்களுக்கும் ஆலோசனை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் இயற்கைக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

Intro:TN_DPI_01_06_POLICE DSP SAVE RAIN WATER _VIS_BYTE_7204444


Body:TN_DPI_01_06_POLICE DSP SAVE RAIN WATER _VIS_BYTE_7204444


Conclusion:TN_DPI_01_06_POLICE DSP SAVE RAIN WATER _VIS_BYTE_7204444


               
 
 
 
தருமபுரி ஆயுதப்படை வளாகத்தில்நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும்வகையில் போலீஸார் 3 குளங்களை அமைத்து மழைநீா்சேமிப்பு.
தருமபுரி மாவட்ட காவல்துறைக்குசொந்தமான ஆயுதப்படை வளாகம்வெண்ணாம்பட்டி பகுதியில் 36 ஏக்கர்பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தில்காவலர்களுக்கான 350 குடியிருப்புகள்கட்டப்பட்டுள்ளன. இவ் வளகத்தில் காவலா் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.  200-க்கும் பயிற்சி காவலர்கள் சுழற்சிமுறையில் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.மேலும், காவலர் சமுதாயக் கூடம், நிர்வாகபிரிவு கட்டிடங்களும் அமைந்துள்ளன.இவற்றுக்கென சுமார் 10 ஏக்கர் நிலம்பயன்படுத்தப்பட்டபோதும் 26 ஏக்கர் நிலம்காலி இடமாக உள்ளது.
இதிலும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பறந்து விரிந்த  பயிற்சி மைதானம்அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இடம்முழுக்க ஆங்காங்கே வேம்பு, புங்கன், தேக்கு உள்ளிட்ட மரங்கள்வளர்க்கப்பட்டுள்ளன. வளாகத்தில்ஆயுதப்படை பயன்பாட்டுக்கென ஒருகிணறு உள்ளது. இதுதவிர6  ஆழ்குழாய்கிணறுகளும் உள்ளன. இவற்றில்4 ஆழ்துளை கிணறுகள் வறட்சியின் காரணமாக வறண்டு விட்டன. ஓரளவுதண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த 2 ஆழ்குழாய் கிணறுகளும் சமீபத்தியகோடை வறட்சியில் வறண்டன. இதனால், ஆயுதப்படை வளாக தேவைகளுக்கெனதண்ணீரை விலை கொடுத்து வாங்கும்நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் பரந்து கிடக்கும்ஆயுதப்படை வளாக பகுதியில்மழைக்காலத்தில் மழைநீரை முழுமையாகசேமிக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தைமாவட்ட காவல் கண்காணிப்பாளர்ராஜனிடம் மதுவிலக்கு அமல்பிரிவுடிஎஸ்பி-யும்காவலர் பயிற்சி பள்ளியின்துணை முதல்வருமான(பொ)மணிகண்டன், ஆயுதப்படை வளாகடிஎஸ்பி சொக்கையா ஆகியோர்தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
அதனை தொடா்ந்த மாவட்டதுணைகண்காணிப்பாளா்கள் மணிகண்டன் மற்றும் சொக்கையா இருவரும்  ஆயுதப்படை காவலர்களின்உடலுழைப்பு, பொக்லைன் இயந்திரம்ஆகியவற்றின் மூலம் 5 நாட்களில் 3 குளங்களை உருவாக்கினா். இதற்குதேவைப்பட்ட ரூ.12 ஆயிரத்தைகாவல்துறையினர் தங்களின் சொந்தபங்களிப்பாக வழங்கியுள்ளனர். குளங்கள்தயார் செய்யும் பணி நடைபெற்ற சில தினங்களிளேயே  தொடர்ந்து தருமபுரியில்பருவமழை பெய்து வந்தது.பரந்து விரிந்த மைதானத்தில் கிடைத்த மழைநீா்  குளங்களில் தேங்கத் தொடங்கியது. முதல் நாள் மழையில் மழைநீா்விழிந்தேடும் பகுதிகளை கண்டறிந்து  அவற்றை வாய்கால்களாக தோன்டி இரண்டு பெரிய குட்டைகளை யும் உருவாக்கினா். சேமித்த மழைநீர் உதவியால் வளாகத்தில் உள்ளகிணற்றில் தற்போது நீர் ஊறத் தொடங்கிவிட்டது. வறண்டுகிடந்த 2 ஆழ்குழாய்கிணறுகளிலும் தற்போது தண்ணீர்ஊற்றெடுக்க தொடங்கி விட்டது.மழைநீா் குட்டையில் தேங்கியதால் கொக்கு போன்ற பறவைகள் இப்பகுதிக்க வரதொடங்கி விட்டது. காய்ந்து கிடந்த மரங்கள் பசுமையாக காட்சி தருகிறது தற்போது தருமபுரி அயுதபடை மைதானம் பசுமைநிறைந்து காணப்படுகிறது.
இது குறித்து பேசிய மதுவிலக்குபிரிவு மாவட்டதுணைகண்காணிப்பாளா் மணிகண்டன்
அயுதபடை வளகத்தில் காவலா் பயிற்சி பள்ளிநடைபெற்று வருகிறது. காவலா்களுக்கு தேவையான தண்ணீரை வெளியில் விலைகொடுத்த வாங்கிவந்தோம். வளாகத்தில் உள்ள மரங்கள் காய்ந்து கிடந்ததை பார்த்து  மழைநீரை சேமிக்க குளம் அமைக்க முடிவு செய்தோம். பின் நானும் அயுதபடை டி.எஸ்.பி சொக்கையாவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜன் அவா்களிடம் தெரிவித்தோம். அவா் இடத்தை ஆய்வு செய்து எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா். அதன் அடிப்படையில் வரண்ட 3 ஆழ்துளை கிணறுகளை தோ்வு செய்து  அவற்றை சுற்றிலும் குளங்கள்  அமைத்தோம். தற்போது பெய்த மழையில் வரண்டுகிறந்த ஆழ்துளைகிணறுகளில் தண்ணீா் வர தொடங்கிவிட்டது. அதனை பார்க்கும் போது மனநிறைவாக இருப்பதாகவும். தனக்கு உதவிபுரிந்த காவலா்களுக்கும் ஆலோசனை வழங்கிய  மாவட்டகாவல் கண்காணிப்பாளருக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்தக்கொண்டார்.மதுவிலக்கு பிரிவுமாவட்டகாவல்துணைகண்காணிப்பாளா் மணிகண்டன்.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.