ETV Bharat / state

பாப்பிரெட்டிபட்டி கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளர்

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோவிந்தராஜ் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உறுதியளித்துள்ளார்.

author img

By

Published : Apr 5, 2019, 11:57 PM IST

அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜ்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி இன்று 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஈடிவி பாரத்திற்காக பிரத்யேகமாக பேட்டியளித்த கோவிந்தசாமி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும், பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

அரூர் முதல் சேலம் செல்லக்கூடிய சாலை தற்போது சேதமடைந்துள்ளது என்று கூறிய அவர், சாலையை செப்பனிட்டு நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதனை மிக வேகமாக செய்து பொது மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவேன் என்றும் உறுதி அளித்தார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி கட்சியினர் தமக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி முழுவதும் உற்சாகமாக வரவேற்பு அளித்தாக தெரிவித்தார்.

மேலும், மக்களின் தேவை அறிந்து செயல்படக்கூடிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால், தங்களுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி இன்று 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஈடிவி பாரத்திற்காக பிரத்யேகமாக பேட்டியளித்த கோவிந்தசாமி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும், பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

அரூர் முதல் சேலம் செல்லக்கூடிய சாலை தற்போது சேதமடைந்துள்ளது என்று கூறிய அவர், சாலையை செப்பனிட்டு நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதனை மிக வேகமாக செய்து பொது மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவேன் என்றும் உறுதி அளித்தார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி கட்சியினர் தமக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி முழுவதும் உற்சாகமாக வரவேற்பு அளித்தாக தெரிவித்தார்.

மேலும், மக்களின் தேவை அறிந்து செயல்படக்கூடிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால், தங்களுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:TN_DPI_01_04_PP BY ELECTION ADMK CANDIDATE _BYTE_VIS_7204444


Body:TN_DPI_01_04_PP BY ELECTION ADMK CANDIDATE _BYTE_VIS_7204444


Conclusion:பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை செய்து தருவேன் பாப்பிரெட்டிப்பட்ட அதிமுக சட்டமன்ற வேட்பாளர் கோவிந்தசாமி பிரத்தியோக பேட்டி..தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி இன்று நூல அள்ளி. எட்டி மரத்து பட்டி .எமகுட்டியூர். உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஈடிவி பாரத்திற்காக பிரத்யோகமாக பேட்டியளித்த கோவிந்தசாமி..பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு   வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.  பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து கால்வாய் நீட்டிப்புதிட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன். அரூர் முதல் சேலம் செல்லக்கூடிய சாலை தற்போது சேதமடைந்துள்ளது. சாலையை செப்பனிட்டு நான்கு வழி சாலையாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கியுள்ளது. இதனை மிக வேகமாக செய்து பொது மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்வேன் என்று உறுதி அளித்தார்.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி கட்சியினர் தமக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி முழுவதும் உற்சாகம் உற்சாக வரவேற்பு அளித்து வருவதாகவும். ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு காரணம் அவர்களுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும்.தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 2000 ரூபாய் என வழங்கப் பட்டுள்ளது. மக்களின் தேவையை அறிந்து செயல்படுவது செயல்படக்கூடிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இதனால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் கோவிந்தசாமி தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது பாமகவைச் சேர்ந்த சேலம் பிரபல மருத்துவர் சுந்தர்ராஜன் உடனிருந்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.