இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளன.
தருமபுரி மாவட்டத்திற்கு கூட்டுறவு அங்காடி மூலம் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக 5 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்று (அக். 31) தருமபுரி பேருந்து நிலையம் அருகேயுள்ள கூட்டுறவு அங்காடியில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதை அறிந்த பொதுமக்கள் கூட்டுறவு அங்காடியில் குவிந்தனர். பின்னர் அவர்கள் தலா இரண்டு கிலோ வெங்காயம் என வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக தருமபுரி பேருந்து நிலையம் கூட்டுறவு அங்காடியில் ஒரு டன் வெங்காயம் விற்பனையானது. மேலும் நான்கு டன் வெங்காயம் நாளை (நவ. 1) மற்ற கூட்டுறவு அங்காடியில் விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது.
இதையும் படிங்க: கூட்டுறவுத் துறை சார்பில் 45 ரூபாய்க்கு வெங்காயம் - மாவட்ட ஆட்சியர்!