ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைக் கொள்ளை

author img

By

Published : Feb 5, 2021, 5:33 PM IST

தர்மபுரி: ஒகேனக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை 8ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகை 8000 ரூபாய் ரொக்கப் பணம் திருட்டு
ஒகேனக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து12 பவுன் தங்க நகை 8000 ரூபாய் ரொக்கப் பணம் திருட்டு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமுவேல் என்பவரின் மனைவி ரதி. இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது மாங்கரை அரசினர் மாணவியர் விடுதியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வரும் இவர் 2 மகன்கள் மற்றும் தனது பாட்டியுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

ரதி தனது வீட்டின் கீழ்பகுதியில் உள்ள அறையை பூட்டி விட்டு இரவில் மாடியில் குடும்பத்துடன் சென்று உறங்கியுள்ளார். இன்று காலை வழக்கமாக கீழிறங்கி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர். விசாரணையில் வீட்டின் பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் எட்டாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 150 சவரன் நகை, ரூ.6 லட்சம் கொள்ளை!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமுவேல் என்பவரின் மனைவி ரதி. இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது மாங்கரை அரசினர் மாணவியர் விடுதியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வரும் இவர் 2 மகன்கள் மற்றும் தனது பாட்டியுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

ரதி தனது வீட்டின் கீழ்பகுதியில் உள்ள அறையை பூட்டி விட்டு இரவில் மாடியில் குடும்பத்துடன் சென்று உறங்கியுள்ளார். இன்று காலை வழக்கமாக கீழிறங்கி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர். விசாரணையில் வீட்டின் பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் எட்டாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 150 சவரன் நகை, ரூ.6 லட்சம் கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.