ETV Bharat / state

போதையில் மனைவியை கொலை செய்த கூலித்தொழிலாளி!

கடலூர்: குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Women Murdered
author img

By

Published : Jul 24, 2019, 6:44 PM IST

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). கூலித்தொழிலாளியான இவர் தினமும் குடித்துவிட்டு, மனைவி அமலாவிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு அமலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, இன்று காலையில் வெகுநேரமாகியும் சுரேஷின் வீடு திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அமலா சடலமாக கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சுரேஷை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). கூலித்தொழிலாளியான இவர் தினமும் குடித்துவிட்டு, மனைவி அமலாவிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு அமலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, இன்று காலையில் வெகுநேரமாகியும் சுரேஷின் வீடு திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அமலா சடலமாக கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சுரேஷை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் முகத்தில் தலையணையால் அமுக்கி பெண் படுகொலை
கடலூர்
ஜூலை 24,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமலா (27) இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுரேஷ் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ் அமலாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மனைவி அமலாவின் முகத்தில் தலையணையால் அமுக்கி உள்ளார் இதில் மூச்சுத்திணறி அமலா பரிதாபமாக உயிரிழந்தார் இதனை அறிந்த சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடந்ததும் வெகுநேரமாகியும் அமலா வீட்டை விட்டு வெளியே வராததை கண்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அமலா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனன தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த அமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுரேஷ் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.