ETV Bharat / state

வாகனத் தணிக்கையில் ஒழுங்கீனம்: இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்! - கடலூர் காவலர்கள் தம்பதியினர் வாக்குவாதம் வீடியோ

கடலூர்: சிதம்பரத்தில் வாகனத் தணிக்கையின்போது தம்பதியினரிடையே ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காவலர்கள் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

chidambaram-police-argument-with-couples-the-viral-video
author img

By

Published : Oct 15, 2019, 11:28 PM IST

Updated : Oct 16, 2019, 4:03 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் மரிய சார்லஸ் ஆகியோர் கஞ்சித்தொட்டியருகே கடந்த 13ஆம் தேதியன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தங்களது இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை மறித்த காவலர்கள், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்குதான் அனுமதி; ஏன் குழந்தைகளை ஏற்றி வந்தாய் என்று அவர்களிடம் கேட்டுள்ளனர்.

இதன்பின் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் என அனைத்து ஆவணங்களின் நகல்களையும் அவர்கள் காண்பித்த பிறகும் காவலர்கள் அபராதத்தொகையை வாங்குவதிலே குறியாக இருந்தனர். இது தொடர்பாக தம்பதியினருக்கும் காவலர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

தம்பதியினரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்ட காவலர்கள்

காவலர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், வாகனத் தணிக்கையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வி.சி.க. சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் மரிய சார்லஸ் ஆகியோர் கஞ்சித்தொட்டியருகே கடந்த 13ஆம் தேதியன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தங்களது இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை மறித்த காவலர்கள், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்குதான் அனுமதி; ஏன் குழந்தைகளை ஏற்றி வந்தாய் என்று அவர்களிடம் கேட்டுள்ளனர்.

இதன்பின் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் என அனைத்து ஆவணங்களின் நகல்களையும் அவர்கள் காண்பித்த பிறகும் காவலர்கள் அபராதத்தொகையை வாங்குவதிலே குறியாக இருந்தனர். இது தொடர்பாக தம்பதியினருக்கும் காவலர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

தம்பதியினரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்ட காவலர்கள்

காவலர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், வாகனத் தணிக்கையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வி.சி.க. சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

Intro:கடலூரில் வாகன தணிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் உத்தரவுBody:கடலூர்
அக்டோபர் 15,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தையுடன் வந்தவரை சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
காவல்துறையினர் இருசக்கர வாகணத்தில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் குழந்தைகளை ஏன் ஏற்ற வந்தாய் இதனால் வழக்கு என கூறியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தலைகவசம் அணிந்து வந்துள்ளனர் மேலும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன சான்றிதழ் நகல் வைத்துள்ளனர் அதனை காண்பித்தும் போலிசார் நகல் செல்லாது இதில் தெளிவாக இல்லை போலியானது என கூறி உன் மீது வழக்கு போட்டே ஆக வேண்டும் கட்டணத்தை செலுத்திவிட்டு செல் என கூறியுள்ளனர்.பைக்கில் வந்த குடும்பத்தினர் போலீசாரிடம் குழந்தைகளை காண்பித்து கெஞ்சியும் மனம் இரங்காத போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகர காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் மரியசார்லஸ் ஆகியோர் 13.10.2019 தேதி மாலை சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் வாகன தணிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.


Conclusion:
Last Updated : Oct 16, 2019, 4:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.