ETV Bharat / state

வெலிங்டன் நீர்த்தேக்கக் கரையில் மீண்டும் தண்ணீர் கசிவு!

கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கக் கரையில் தண்ணீர் கசிவதால், அணையைப் பலப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

author img

By

Published : Dec 10, 2019, 6:04 PM IST

wellinton-water-leakage-issue
wellinton-water-leakage-issue

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் சில நாள்களுக்கு முன் பெய்த பருவமழையின்போது 15 அடி அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நீர்தேக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான மழை இல்லாததாலும், ஏரி முறையாக தூர்வாரப்படாததாலும் கரைகள் பலவீனமடைந்தன. 2018ஆம் ஆண்டு பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியது. அப்போது திடீரென அணை உள்வாங்கியதால் 20 மீட்டர் அளவிற்கு அணை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி அணையின் நிலை குறித்து அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

வெலிங்டன் நீர்த்தேக்கக் கரையில் மீண்டும் தண்ணீர் கசிவு

பின்னர் அரசும் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அணையை பலப்படுத்தும் பணியைத் செய்தது. இதையடுத்து வடகிழக்குப் பருவமழையின்போது 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தது. தற்போது நான்கு நாள்களாக 2018இல் விரிசல் ஏற்பட்ட பகுதியின் வெளிப்புறம் தரைக்கு அடி பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கினாலும் முறையாக கரையை பலப்படுத்தாததே தண்ணீர் கசிவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அரசு அலுவலர்களும் பொதுப்பணித் துறையினரும் தலையிட்டு வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரைகளை கான்கிரீட் கொண்டு அணை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையின் நீர் அளவை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் சில நாள்களுக்கு முன் பெய்த பருவமழையின்போது 15 அடி அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நீர்தேக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான மழை இல்லாததாலும், ஏரி முறையாக தூர்வாரப்படாததாலும் கரைகள் பலவீனமடைந்தன. 2018ஆம் ஆண்டு பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியது. அப்போது திடீரென அணை உள்வாங்கியதால் 20 மீட்டர் அளவிற்கு அணை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி அணையின் நிலை குறித்து அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

வெலிங்டன் நீர்த்தேக்கக் கரையில் மீண்டும் தண்ணீர் கசிவு

பின்னர் அரசும் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அணையை பலப்படுத்தும் பணியைத் செய்தது. இதையடுத்து வடகிழக்குப் பருவமழையின்போது 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தது. தற்போது நான்கு நாள்களாக 2018இல் விரிசல் ஏற்பட்ட பகுதியின் வெளிப்புறம் தரைக்கு அடி பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கினாலும் முறையாக கரையை பலப்படுத்தாததே தண்ணீர் கசிவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அரசு அலுவலர்களும் பொதுப்பணித் துறையினரும் தலையிட்டு வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரைகளை கான்கிரீட் கொண்டு அணை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையின் நீர் அளவை கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்

Intro:திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரையில் தண்ணீர் கசிவதால் சுற்றுவட்டார பொதுமக்கள் அச்சம்.Body:கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் சில நாட்களுக்கு முன் பெய்த பருவமழையின் போது 15 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நீர்தேக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான மழை இல்லாததாலும். ஏரி முறையாக தூர்வாரப்படாததாலும் கரைகள் பலவீனமடைந்து உள்ளதாலும் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது 2018ஆம் ஆண்டு பெய்த மழையால் தண்ணீர் நிரம்பியது. இந்நிலையில் திடீரென்று அணை உள்வாங்கியதால் 20 மீட்டர் அளவிற்கு அணை சேதமடைந்து விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் சுற்றுவட்டார மக்கள் கடுமையான போராட்டம் நடத்தி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அரசும் ஒரு கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்து அணையை பலப்படுத்தும் பணியைத் துவங்கி முடித்து வைத்தனர். இதனால் விவசாயிகளும் சுற்று வட்டாரப்பகுதி பொது மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது பெய்த மழையில் 15 அடி அளவு தண்ணீர் பிடித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சி அளித்தது தற்போது நான்கு நாட்களாக 2018ல் விரிசல் ஏற்பட்ட பகுதியின் வெளிப்புறம் தரைக்கு அடி பகுதியில் தண்ணீர் கசிவு பெருமளவில் ஏற்பட்டு வருகிறது இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைகின்றனர் விவசாயிகளும் வேதனை அடைந்து வருகின்றனர் இந்த முறையும் நம்மால் விவசாயம் செய்ய முடியுமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் விவசாயிகள் அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கினாலும் முறையாக கரையை பலப்படுத்தாதைஇந்த நிலைக்கு காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர். 15 அடி தண்ணீர் உள்ள போதே இந்த நிலைமை என்றால் முழு கொள்ளளவும் பிடித்தால் என்ன நிலைமை என்று விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் உடனடியாக அரசு அதிகாரிகளும் பொதுப்பணித் துறையும் தலையிட்டு வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரைகளை முழுமையாக காங்கிரட் அணை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.