ETV Bharat / state

கடலூரில் வேலைநிறுத்தத்தில் களமிறங்கிய விஏஓக்கள்: பாதிப்படைந்த பொதுமக்கள் - Vao protested in cuddalore

கடலூர்: மக்களவைத் தேர்தலில் ஈடுபட்டதற்கான மதிப்புத்தொகை மிகக் குறைந்த அளவில் வழங்கப்பட்டதைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

vao protest, கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
vao protest
author img

By

Published : Dec 16, 2019, 8:59 PM IST

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பணியில் அரசுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் கடலூரில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்களும் தேர்தலில் பணியாற்றினர். அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 விழுக்காடு வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.

"ஆனால் இந்த அரசாணையின்படி சம்பளம் வழங்காமல் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கையால் வழங்குகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் கூறியுள்ளோம். அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த மாதம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தின்போது, இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், உள்துறை செயலரிடம் புகார் தெரிவித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்திருந்தனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்

இதனிடையே, இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெறச் சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பணியில் அரசுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் கடலூரில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்களும் தேர்தலில் பணியாற்றினர். அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 விழுக்காடு வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.

"ஆனால் இந்த அரசாணையின்படி சம்பளம் வழங்காமல் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கையால் வழங்குகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் கூறியுள்ளோம். அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த மாதம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தின்போது, இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், உள்துறை செயலரிடம் புகார் தெரிவித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்திருந்தனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்

இதனிடையே, இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெறச் சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Intro:கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
Body:கடலூர்
டிசம்பர் 16,

கடலூரில் பாராளுமன்ற தேர்தலில் மதிப்புத் தொகை மிகக் குறைந்த அளவில் வழங்கப்பட்டது கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கடலூரில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்களும் பணியாற்றியுள்ளனர் அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது ஆனால் இந்த அரசாணையின்படி சம்பளம் வழங்காமல் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கையால் வழங்குகின்றனர் இதனை மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்கள் பெறுவதில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கூறியுள்ளோம். அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என குற்றம்சாட்டி கடந்த மாதம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் வருவாய் நிர்வாக ஆணையர் உள்துறை செயலரிடம் இதுபற்றி புகார் தெரிவித்து அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்போம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்கா அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ் மற்றும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.