ETV Bharat / state

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் - கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

கடலூர்: தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 33 பேரை கடலூர் போலீசார் கைது செய்தனர்.

terrorist checking in cuddalore
author img

By

Published : Aug 23, 2019, 7:44 PM IST

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர், இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆய்வாளர்களும் சுங்கச்சாவடிகளில் சோதனையிடுமாறு காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் புதுவை எல்லையான ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

மேலும், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல குற்றச் செயல்களில் தொடர்புடைய 33 பேரை கைது செய்தனர்.

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர், இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆய்வாளர்களும் சுங்கச்சாவடிகளில் சோதனையிடுமாறு காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் புதுவை எல்லையான ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

கடலூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

மேலும், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல குற்றச் செயல்களில் தொடர்புடைய 33 பேரை கைது செய்தனர்.

Intro:6 தீவரவாதிகள் தமிழக பகுதியில் ஊடுருவல் - கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள 33 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்Body:கடலூர்
ஆகஸ்ட் 23,

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சுமார் 6 பேர் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு அலர்ட் கொடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு திடீரென மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில்  ஈடுபடுமாறு டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கடலூர் மாவட்ட கடற்கரையோரம் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர் மேலும் இன்று காலை ஆழ்கடலுக்கு சென்ற கடலோர காவல் படையினர் மீனவர்கள் படகில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்

இதனை தொடர்ந்து கடலூர் -புதுவை எல்லையான ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடலூர் மாவட்டம் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.