ETV Bharat / state

'ஆட்சியர் அலுவலகம் முற்றுகை' -  புதுசம்பவத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

author img

By

Published : Oct 3, 2019, 10:05 PM IST

கடலூர்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

cuddalore collector office

கடலூர் செம்மங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பயோனியர் ஜெல்லீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாண்டியகெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் வாழ்வுரிமை சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரு தொழிற்சாலைகளில் தொழிலாளர் விரோதப்போக்கை கடைபிடித்து வருவதாகவும், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் தொழிற்சாலைக்கு ஆதரவான செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இதனைக் கண்டித்து தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக இக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயற்சி நடைபெற்றது.

சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், சுமூகத் தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நாட்கள் கடந்தும் இன்றுவரை சுமூக தீர்வு ஏற்படவில்லை. அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியினர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதில், தொழிற்சாலையின் நிர்வாகத்தைக் கண்டித்து பதாகைகளையும், முழக்கங்களையும் எழுப்பினர். அத்தோடு இதுதொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று, பின் விடுவித்தனர்.

இதையும் படிங்க : காந்தி மார்கெட்டை அழிக்கக்கூடாது - அரசுக்கு வியாபாரிகள் வேண்டுகோள்!

கடலூர் செம்மங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பயோனியர் ஜெல்லீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாண்டியகெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் வாழ்வுரிமை சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரு தொழிற்சாலைகளில் தொழிலாளர் விரோதப்போக்கை கடைபிடித்து வருவதாகவும், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் தொழிற்சாலைக்கு ஆதரவான செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இதனைக் கண்டித்து தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக இக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயற்சி நடைபெற்றது.

சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், சுமூகத் தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நாட்கள் கடந்தும் இன்றுவரை சுமூக தீர்வு ஏற்படவில்லை. அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியினர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதில், தொழிற்சாலையின் நிர்வாகத்தைக் கண்டித்து பதாகைகளையும், முழக்கங்களையும் எழுப்பினர். அத்தோடு இதுதொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று, பின் விடுவித்தனர்.

இதையும் படிங்க : காந்தி மார்கெட்டை அழிக்கக்கூடாது - அரசுக்கு வியாபாரிகள் வேண்டுகோள்!

Intro:கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் 60 பேர் கைது
Body:கடலூர்
அக்டோபர் 3,

கடலூர் செம்மங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பயோனியர் ஜெல்லீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாண்டியகெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த தொழிலாளர்கள்மற்றும் வாழ்வுரிமை சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரு தொழிற்சாலைகளில் நிர்வாகமும் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தொழிற்சாலைக்கு ஆதரவான செயலில் ஈடுபடுவதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர் மேலும் இது சம்பந்தமாக இக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயற்சி நடைபெற்றது.அப்போது தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக சுமுக தீர்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இக் கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மேலும் தொழிற்சாலையின் நிர்வாகத்தை கண்டித்து பதாகைகளையும் கோஷங்களையும் எழுப்பினர்அத்தோடு இதுதொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

தகவலறிந்து வந்த கடலூர் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்க்கு அழைத்துச் சென்றனர் இச்சம்பவத்தால் ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.