ETV Bharat / state

கடலூர் மாவட்டத்தில் ரூ.6.50 லட்சம் பணம் பறிமுதல்

author img

By

Published : Mar 20, 2019, 8:42 PM IST

கடலூர்: மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் வியாபாரிகளிடம் ரூ. ஆறரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.

இதன் காரணமாக கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படைகள், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோகிராபர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

வாகன சோதனையில் ரூ.6.50 பணம் பறிமுதல்

மேலும் இந்த சோதனையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி பணமோ, நகையோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரி விளம்பரங்கள் மூலம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாகனங்கள் மூலம் பல வியாபாரிகள் எடுத்துச் சென்ற ரூ.6.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.

இதன் காரணமாக கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படைகள், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோகிராபர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

வாகன சோதனையில் ரூ.6.50 பணம் பறிமுதல்

மேலும் இந்த சோதனையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி பணமோ, நகையோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரி விளம்பரங்கள் மூலம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாகனங்கள் மூலம் பல வியாபாரிகள் எடுத்துச் சென்ற ரூ.6.50 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


கடலூரில் இன்று மட்டும் வியாபாரிகளிடம் ரூபாய் 6 1/2லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி வேட்டை

கடலூர்
மார்ச் 20,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படை குழுவும், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோகிராபர்கள் மற்றும் போலீசார் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌. மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பணமோ நகையோ அல்லது பொருட்களை எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்லும் நபர்களிடம் ஒப்படைக்கப்படும். உரிய ஆவனம் செலுத்தாவிட்டால் அவர்கள் முறைப்படி ஆவணங்கள் காண்பித்து அதன் பிறகு தங்கள் பணமோ அல்லது பொருட்களை வாங்கி செல்லலாம். 


இந்த நிலையில் கடலூர் அடுத்த மருதாடு பகுதியில் தேர்தல்  பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வானத்தில் வந்த தமிழரசன் என்பவ்ரிடம் இருந்து  1 லட்சத்து 46 ஆயிரம் ரூ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது- தமிழரசன். பட்டானி வியாபாரி சிறுசிறுதாக வசூல் செய்யப்பட்ட பணத்தை கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஆவணங்கள் இதுவரை காண்பிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


அதேபோல் கடலூர் ஆல் பேட்டை சோதனைச் சாவடியில் தாசில்தார் கீதா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஹெட் கான்ஸ்டபிள் இளமாறன் மற்றும் போலீசார் ராஜசேகர் செல்வகுமார் ஆகியோர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அவர்கள் கொண்டு வந்த பையில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 640 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை விசாரணை செய்ததில் சத்திய பிரபு மற்றும் குமரேசன் மகளிர் சுய உதவி குழுக்கள் கலெக்ஷன் செய்த பணத்தை அலுவலத்தில் ஒப்படைப்பதற்காக சென்றதாக கூறினார். உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு பணத்தை பெற்றுக் கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் கூறினர்.

மேலும் அதே வழியாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் பெட்ரோல் பங்க் ஊழியர் செந்தில் என்பவர் பையில் 1.40 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறினர் பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Video send ftp
File name: TN_CDL_01_20_FLYING_SQUAD_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.