ETV Bharat / state

மருத்துவர்களின் கவனக்குறைவால் பெண் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம் - மருத்துவர்களின் அஜாக்கிரதையால் கர்ப்பிணி உயிரிழப்பு

கடலூர்: விருத்தாசலத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை பெற்றெடுத்த பெண் உயிரிழந்தைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pregnannt lady
pregnannt lady
author img

By

Published : Jan 4, 2020, 9:18 AM IST

கடலூர் மாவட்டம் ஆலடி அருகே உள்ள கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவரும் குருவன் குப்பத்தைச் சேர்ந்த பிரியா (24) என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்துவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, கடந்த டிசம்பர் 27ஆம் தேதி இரவு பிரசவ வலியால் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு நாள்களாக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பிரியாவின் வயிறு வீக்கமாக இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைபெற்ற பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரியாவின் வயிற்றில் சிசேரியன் செய்த பழைய துணி, பஞ்சுகள் ஆகியவை இருந்ததனால், அவரது வயிறு வீங்கி உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கவனக்குறைவால் ஒரு உயிரை கொன்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியாவின் குடும்பத்தினரும் அவரது உறவினர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட பிரியா குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் இதுபோன்று வேறு யாருக்கும் நிகழக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் பிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனக் கூறி பிரியாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, புகார் கொடுத்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததன் பேரில், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!

கடலூர் மாவட்டம் ஆலடி அருகே உள்ள கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவரும் குருவன் குப்பத்தைச் சேர்ந்த பிரியா (24) என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்துவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, கடந்த டிசம்பர் 27ஆம் தேதி இரவு பிரசவ வலியால் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு நாள்களாக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பிரியாவின் வயிறு வீக்கமாக இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைபெற்ற பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரியாவின் வயிற்றில் சிசேரியன் செய்த பழைய துணி, பஞ்சுகள் ஆகியவை இருந்ததனால், அவரது வயிறு வீங்கி உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கவனக்குறைவால் ஒரு உயிரை கொன்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியாவின் குடும்பத்தினரும் அவரது உறவினர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட பிரியா குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் இதுபோன்று வேறு யாருக்கும் நிகழக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் பிரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனக் கூறி பிரியாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, புகார் கொடுத்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததன் பேரில், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!

Intro:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் டாக்டர்களின் அஜாக்கிரதையால் கர்ப்பிணி பெண் உயிரிலந்ததாக கூறி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்Body:கடலூர் மாவட்டம்
விருத்தாச்சலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 27. இவரும் குருவன் குப்பத்தைச் சேர்ந்த முருகன் மகள் பிரியா 24 என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 11 -5 -2018 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரியா கடந்த 27ஆம் தேதி இரவு பிரசவ வலியால் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு 11. 40 மணிக்கு சிசேரியன் மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து நான்கு நாட்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 31ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது மேலும் வயிறு வீக்கம் ஆக இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற பிரியா சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் பிரியாவின் வயிற்றில் சிசேரியன் பழைய துணி மற்றும் பஞ்சுகள் இருந்ததாகவும், இதனால் அவரது வயிறு வீங்கி உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டதாகவும், டாக்டர்களின் அஜாக்கிரதை காரணமாக ஒரு உயிரை கொன்று விட்டதாகவும், கூறி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பிரியா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுபோல வேறு ஏதேனும் சம்பவங்கள் நடைபெறக் கூடாது, என வலியுறுத்தி பிரியாவின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்துவந்த விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார் பிரியாவின் உறவினர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் செவிலியர்கள் வந்து சிகிச்சை தவறால் தான் பிரியா இறந்தார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளிக்க வேண்டும் என கூறி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பிரியாவின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து புகார் கொடுத்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.