வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம் நவநீத நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்(60) என்ற முதியவர் முகாமிலிருந்து காலை தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், முதியவர் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முல்லை பெரியாரில் முதியவர் உடல் மீட்பு!