ETV Bharat / state

இன்று முதல் மீன்பிடி தடை காலம் தொடக்கம்

author img

By

Published : Apr 15, 2019, 5:21 PM IST

கடலூர்: கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்குவதற்கும் கடல் வளங்கள் அழியாமல் பாதுகாப்பதற்காகவும் தமிழக அரசின் சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடை காலம்

கடலூரில் மட்டும் சுமார் 63 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் பைபர் படகு, 600 விசைப்படகு, 300 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று முதல் மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியை தவிர்த்துவிட்டு தங்களுடைய படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களுடைய வலைகள் மற்றும் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுங்கிலும் உள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலம்

கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மேற்காணும் 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும், கடலில் மீன் இனவிருத்திக்கு ஏற்ற காலமான 61 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

கடலூரில் மட்டும் சுமார் 63 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் பைபர் படகு, 600 விசைப்படகு, 300 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று முதல் மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியை தவிர்த்துவிட்டு தங்களுடைய படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களுடைய வலைகள் மற்றும் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுங்கிலும் உள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலம்

கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மேற்காணும் 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும், கடலில் மீன் இனவிருத்திக்கு ஏற்ற காலமான 61 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

Intro:இன்று முதல் மீன்பிடி தடை காலம் தொடக்கம்


Body:கடலூர்
ஏப்ரல் 15,

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்குவதற்கும் கடல் மீன்வளங்கள் அழியாமல் பாதுகாப்பதற்காகவும் தமிழக அரசின் சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூரில் மட்டும் சுமார் 63 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இக் கிராமத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் பைபர் படகு 600 விசைப்படகு 300 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கிடையில் இன்று முதல் மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியை தவிர்த்துவிட்டு தங்களுடைய படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர் மேலும் மீனவர்கள் தங்களுடைய வலைகள் மற்றும் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியதாவது; கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைபடகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின்படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மேற்காணும் 61 நாட்களுக்கு கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும் கடலில் மீன் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு மீன் வளம் பெருக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள அறுபத்தி ஒரு நாட்கள் முடியும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.