ETV Bharat / state

கடலூரில் இந்து மனுதர்ம நகல் எரிப்பு: திராவிட கழகத்தினர் கைது! - Cuddalore

கடலூர்: கடலூரில் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்ற திராவிடர் கழக மாநில மகளிர் அணிச் செயலாளர் ராமபிரபா, மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், செயலாளர் குணசுந்தரி உட்பட 35 க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூரில் திகவினர் போராட்டம்
author img

By

Published : Feb 7, 2019, 7:02 PM IST

இந்து மனுதர்மம் பெண்ணடிமைத்தனம், சூத்திர இழிவு உள்ளிட்டவற்றை பாதுகாப்பதாக கூறி திராவிட கழகத்தினர் தமிழகம் முழுவதும் இந்து மனுதர்ம நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் திராவிடர் கழகத்தினர் 35 க்கும் மேற்பட்டோர் கடலூர் பெரியார் சிலைக்கு அருகில் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால் இருதரப்பினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடிபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

DK partys arrested
கடலூரில் திகவினர் போராட்டம்
undefined

பின்னர் அவர்களிடமிருந்த மனுதர்ம நகலை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திராவிட கழகத்தினரின் திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மனுதர்மம் பெண்ணடிமைத்தனம், சூத்திர இழிவு உள்ளிட்டவற்றை பாதுகாப்பதாக கூறி திராவிட கழகத்தினர் தமிழகம் முழுவதும் இந்து மனுதர்ம நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் திராவிடர் கழகத்தினர் 35 க்கும் மேற்பட்டோர் கடலூர் பெரியார் சிலைக்கு அருகில் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால் இருதரப்பினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடிபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

DK partys arrested
கடலூரில் திகவினர் போராட்டம்
undefined

பின்னர் அவர்களிடமிருந்த மனுதர்ம நகலை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திராவிட கழகத்தினரின் திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மனுதர்ம நகல் எரிப்பு போராட்டம்
கடலூர்
பிப்ரவரி7,
திராவிடர் கட்சி சார்பில் மனுதர்ம நகல் எரிப்பு போராட்டம் கடலூர் பெரியார் சிலைக்கு அருகில் நடைபெற்றது.
இந்த நகல் எரிப்பு போராட்டத்திற்கு மாநில மகளிர் அணிச் செயலாளர் ராமபிரபா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள் செயலாளர் குணசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது மனித தர்மத்துக்கு விரோதமான மனுதர்ம நகலை எரித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.