உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடலூரில் நேற்று (ஜூலை 16) வரை கரோனா தொற்றால் 1,643 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று(ஜூலை 17) மேலும் 44 பேருக்குக் கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,687ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 16) வரை; 1,233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று (ஜூலை 17) மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து மொத்தம் 1,293 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி, 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (ஜூலை 17) மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் மொத்தம் 15 பேர் கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கடலூர் கரோனா அப்டேட்: 44 பேர் அட்மிட்; 60 பேர் டிஸ்சார்ஜ்! - கடலூரில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புடன் எண்ணிக்கை
கடலூர்: மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) ஒரே நாளில் மட்டும் 44 பேருக்குக் கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடலூரில் நேற்று (ஜூலை 16) வரை கரோனா தொற்றால் 1,643 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று(ஜூலை 17) மேலும் 44 பேருக்குக் கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,687ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 16) வரை; 1,233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று (ஜூலை 17) மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து மொத்தம் 1,293 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை சிகிச்சைப் பலனின்றி, 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (ஜூலை 17) மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் மொத்தம் 15 பேர் கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.