ETV Bharat / state

பட்டப்பகலில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருட்டு ! - கடலூர் ரூ.10 லட்சம் மதிப்பிலான திருமண நகை திருட்டு

கடலூர்: எல்.என்.புரம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருமணத்திற்காக வைத்திருந்த பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை திருடியவர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

திருட்டு
author img

By

Published : Nov 5, 2019, 8:57 AM IST

Updated : Nov 5, 2019, 9:09 AM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ள எல்.என்.புரம் பகுதியில் வசித்துவரும் சுரேஷ் (47) என்பவர் அங்கு தையல்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

சுரேஷ் தனது மகளின் திருமணத்தினையொட்டி ஜவுளி வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்றுள்ளார். மாலையில் தனது கடை ஊழியர் ஒருவரிடம், தன் வீட்டிற்கு சென்று மின்விளக்கு போடுமாறு கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லை என்பதையறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 35 சவரன் தங்கநகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாலையில் கடை ஊழியர் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து அவர் சுரேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பபட்டு தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

theft
காவலர் விசாரணை

இதற்கிடையே காஞ்சிபுரம் சென்றிருந்த சுரேஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் உட்பட 35 பவுன் நகை திருடப்பட்டது குறித்து காவல்நியைத்தில் புகார் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை பணத்தின் மொத்த மதிப்பு பத்து லட்சம் என்று சுரேஷ் தரப்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மணப்பாறையில் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் 10 சவரன் நகை கொள்ளை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ள எல்.என்.புரம் பகுதியில் வசித்துவரும் சுரேஷ் (47) என்பவர் அங்கு தையல்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

சுரேஷ் தனது மகளின் திருமணத்தினையொட்டி ஜவுளி வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்றுள்ளார். மாலையில் தனது கடை ஊழியர் ஒருவரிடம், தன் வீட்டிற்கு சென்று மின்விளக்கு போடுமாறு கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லை என்பதையறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 35 சவரன் தங்கநகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாலையில் கடை ஊழியர் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து அவர் சுரேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பபட்டு தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

theft
காவலர் விசாரணை

இதற்கிடையே காஞ்சிபுரம் சென்றிருந்த சுரேஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் உட்பட 35 பவுன் நகை திருடப்பட்டது குறித்து காவல்நியைத்தில் புகார் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை பணத்தின் மொத்த மதிப்பு பத்து லட்சம் என்று சுரேஷ் தரப்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மணப்பாறையில் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் 10 சவரன் நகை கொள்ளை!

Intro:கடலூரில் திருமணத்திற்கு வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசைBody:கடலூர்
நவம்பர் 4,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை செல்லும் சாலையில் எல்.என்.புரம் உள்ளது இப்பகுதியில் சுரேஷ்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு டெய்லரிங் கடை நடத்தி வருகிறார் இவரிடம் 10க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதால் திருமணத்திற்கு தேவையான ஜவுளி வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்று இருந்தார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் சுரேஷின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

சுரேஷ் தனது டெய்லர் கடையில் வேலை பார்க்கும் ஊழியரிடம் வீட்டிற்கு சென்று மின்விளக்கு போடும் மாறு கூறியுள்ளார் அதன்பேரில் கடையின் ஊழியர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனைத் தொடர்ந்து அவர் கடையின் உரிமையாளர் சுரேஷிற்கு தொலைபேசியில் கூறியுள்ளார் இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார் ஜவ்வாது உசேன் மாயகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர் மேலும் அக்கம்பக்கத்தினர் இடம் விசாரணை நடத்தினர்.இதற்கிடையே காஞ்சிபுரம் சென்றிருந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

பின்னர் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டஅது சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்றது பின்னர் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர் வீட்டில் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மக்கள் நெருக்கமான பகுதிகளில் இப்படி திருட்டு சம்பவம் அரங்கேற்றி இருப்பது பொது மக்களிடையே மிகவும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:
Last Updated : Nov 5, 2019, 9:09 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.